பல்கலைக்கழக விவகாரங்களில் மாநில அரசு தலையிட முடியாது என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறியுள்ளார்.
பல்கலைக்கழக விவகாரங்களில் மாநில அரசு தலையிட முடியாது என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறியுள்ளார்.
அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை, நிர்மலா தேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாகப் புகார் கூறப்பட்டது. இது தொடர்பான ஆடியோ உரையாடல் அடிப்படையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலாலுக்கும் தொடர்பிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், பேராசிரியை விவகாரம் தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சென்னை ராஜ்பவனில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். தமிழக அரசியல் வரலாற்றில் ஆளுநர் ஒருவர் ராஜ்பவனில் செய்தியாளர்களை சந்திப்பது இது முதல்முறையாகும்.
ஆளுநர் பன்வாரிலால் ப்ரோகித் கூறுகையில், "கல்வித்துறையில் எந்தத் தவறும் நடைபெற வில்லை என நான் சொல்லவில்லை. சில தவறுகள் நடந்துள்ளன. கல்வித்துறையில் நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டி உள்ளது. பேராசிரியை நிர்மலா தேவி யார் என்று எனக்குத் தெரியாது. இந்த விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சந்தானம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். யாரும் கவலைப்படத் தேவையில்லை. இந்த விவகாரத்தில் என் மீதான குற்றச்சாட்டு தவறானது. வெளிப்படையாக விசாரணை நடத்தப்படும். பல்கலைக்கழகத்தில் வேந்தருக்குத் தான் அனைத்து அதிகாரமும் இருக்கிறது. வேந்தர் என்பவர் மாநில அரசையோ, அமைச்சர்களையோ கலந்து முடிவெடுக்க வேண்டிய அவசியம் இல்லை. நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன். என் மீது எந்தப் புகாரும் இல்லை." என்றார்.
அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை, நிர்மலா தேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாகப் புகார் கூறப்பட்டது. இது தொடர்பான ஆடியோ உரையாடல் அடிப்படையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலாலுக்கும் தொடர்பிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், பேராசிரியை விவகாரம் தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சென்னை ராஜ்பவனில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். தமிழக அரசியல் வரலாற்றில் ஆளுநர் ஒருவர் ராஜ்பவனில் செய்தியாளர்களை சந்திப்பது இது முதல்முறையாகும்.
ஆளுநர் பன்வாரிலால் ப்ரோகித் கூறுகையில், "கல்வித்துறையில் எந்தத் தவறும் நடைபெற வில்லை என நான் சொல்லவில்லை. சில தவறுகள் நடந்துள்ளன. கல்வித்துறையில் நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டி உள்ளது. பேராசிரியை நிர்மலா தேவி யார் என்று எனக்குத் தெரியாது. இந்த விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சந்தானம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். யாரும் கவலைப்படத் தேவையில்லை. இந்த விவகாரத்தில் என் மீதான குற்றச்சாட்டு தவறானது. வெளிப்படையாக விசாரணை நடத்தப்படும். பல்கலைக்கழகத்தில் வேந்தருக்குத் தான் அனைத்து அதிகாரமும் இருக்கிறது. வேந்தர் என்பவர் மாநில அரசையோ, அமைச்சர்களையோ கலந்து முடிவெடுக்க வேண்டிய அவசியம் இல்லை. நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன். என் மீது எந்தப் புகாரும் இல்லை." என்றார்.