பணத்தட்டுப்பாட்டை தவிர்க்க கூடுதலாக ரூ. 500 நோட்டுகளை அச்சிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
பணத்தட்டுப்பாட்டை தவிர்க்க கூடுதலாக ரூ. 500 நோட்டுகளை அச்சிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
குஜராத், பீகார், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரம், தெலுங்கானா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஏ.டி.எம்., மையங்களில் பணம் தட்டுப்பாடு ஏற்பட்ட காரணத்தால் மத்திய அரசு மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. இது தொடர்பாக, ரிசர்வ் வங்கி அதிகாரிகளுடன் நிதியமைச்சகம் அவசர ஆலோசனை நடத்தியது- பின்னர், நிதியமைச்சர் அருண் ஜெட்லி செய்தியாளர்களிடம் பேசுகையில், "செயற்கையாக உருவாகி உள்ள இந்த பணத்தட்டுப்பாடு அடுத்த சில நாட்களில் தீர்க்கப்படும், தேவைக்கு அதிகமான அளவு பணம் இருக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பணத்தட்டுப்பாட்டை தவிர்க்க கூடுதலாக ரூ. 500 நோட்டுகளை அச்சிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, பொருளாதார விவகாரத்துறை செயலர் எஸ் சி கார்க் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில். "இனிவரும் நாட்களில் ரூ. 500 நோட்டு, ஒரு நாளைக்கு 5 மடங்காக, ரூ. 2,500 கோடிக்கு அச்சிடப்படும்" எனக் குறிப்பிட்டார். நாடு முழுவதும் ஏ.டி.எம்.,களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ரூ. 500 நோட்டுக்கள் அதிகமாக அச்சடிப்பதன் மூலம் மாத சப்ளை ரூ. 70,000 - ரூ. 75,000 கோடியாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத், பீகார், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரம், தெலுங்கானா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஏ.டி.எம்., மையங்களில் பணம் தட்டுப்பாடு ஏற்பட்ட காரணத்தால் மத்திய அரசு மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. இது தொடர்பாக, ரிசர்வ் வங்கி அதிகாரிகளுடன் நிதியமைச்சகம் அவசர ஆலோசனை நடத்தியது- பின்னர், நிதியமைச்சர் அருண் ஜெட்லி செய்தியாளர்களிடம் பேசுகையில், "செயற்கையாக உருவாகி உள்ள இந்த பணத்தட்டுப்பாடு அடுத்த சில நாட்களில் தீர்க்கப்படும், தேவைக்கு அதிகமான அளவு பணம் இருக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பணத்தட்டுப்பாட்டை தவிர்க்க கூடுதலாக ரூ. 500 நோட்டுகளை அச்சிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, பொருளாதார விவகாரத்துறை செயலர் எஸ் சி கார்க் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில். "இனிவரும் நாட்களில் ரூ. 500 நோட்டு, ஒரு நாளைக்கு 5 மடங்காக, ரூ. 2,500 கோடிக்கு அச்சிடப்படும்" எனக் குறிப்பிட்டார். நாடு முழுவதும் ஏ.டி.எம்.,களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ரூ. 500 நோட்டுக்கள் அதிகமாக அச்சடிப்பதன் மூலம் மாத சப்ளை ரூ. 70,000 - ரூ. 75,000 கோடியாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.