பணத்தட்டுப்பாட்டை தவிர்க்க கூடுதலாக ரூ. 500 நோட்டுகளை அச்சிடத் திட்டம்

பணத்தட்டுப்பாட்டை தவிர்க்க கூடுதலாக ரூ. 500 நோட்டுகளை அச்சிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

பணத்தட்டுப்பாட்டை தவிர்க்க கூடுதலாக ரூ. 500 நோட்டுகளை அச்சிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. 

குஜராத், பீகார், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரம், தெலுங்கானா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஏ.டி.எம்., மையங்களில் பணம் தட்டுப்பாடு ஏற்பட்ட காரணத்தால் மத்திய அரசு மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. இது தொடர்பாக, ரிசர்வ் வங்கி அதிகாரிகளுடன் நிதியமைச்சகம் அவசர ஆலோசனை நடத்தியது- பின்னர், நிதியமைச்சர் அருண் ஜெட்லி செய்தியாளர்களிடம் பேசுகையில், "செயற்கையாக உருவாகி உள்ள இந்த பணத்தட்டுப்பாடு அடுத்த சில நாட்களில் தீர்க்கப்படும், தேவைக்கு அதிகமான அளவு பணம் இருக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார். 

இந்நிலையில், பணத்தட்டுப்பாட்டை தவிர்க்க கூடுதலாக ரூ. 500 நோட்டுகளை அச்சிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, பொருளாதார விவகாரத்துறை செயலர் எஸ் சி கார்க் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில். "இனிவரும் நாட்களில் ரூ. 500 நோட்டு, ஒரு நாளைக்கு 5 மடங்காக, ரூ. 2,500 கோடிக்கு அச்சிடப்படும்" எனக் குறிப்பிட்டார். நாடு முழுவதும் ஏ.டி.எம்.,களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ரூ. 500 நோட்டுக்கள் அதிகமாக அச்சடிப்பதன் மூலம் மாத சப்ளை ரூ. 70,000 - ரூ. 75,000 கோடியாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...