திருப்பூர் : திருப்பூரில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாமதம் காட்டியது பொதுமக்களை அதிருப்தியில் ஆழ்த்தியது.
திருப்பூர் : திருப்பூரில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாமதம் காட்டியது பொதுமக்களை அதிருப்தியில் ஆழ்த்தியது.

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் இரண்டாம் திட்ட குடிநீர் மேட்டுப்பாளையத்திலிருந்து குழாய் வழியாக கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. திருமுருகன்பூண்டி பகுதியில் இத்திட்டக் குடிநீர் வரும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வெளியேறி சாக்கடையில் கலந்து வீணாகியது.
இது தொடர்பாக பொதுமக்கள் புகார் அளித்தும், உரிய அதிகாரிகள் நிகழ்விடத்திற்கு வந்து குழாய் உடைப்பை சரிசெய்வதில் தாமதம் காட்டினர். இதனால், சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக குடிநீர் வீணாக சாக்கடையில் கலந்தது.
கோடைக் காலத்தில் குடிநீர் பற்றாக்குறை நிலவி வரும் வேளையில், நீரை சேமிக்க அதிகாரிகள் அலட்சியம் காட்டுவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் இரண்டாம் திட்ட குடிநீர் மேட்டுப்பாளையத்திலிருந்து குழாய் வழியாக கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. திருமுருகன்பூண்டி பகுதியில் இத்திட்டக் குடிநீர் வரும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வெளியேறி சாக்கடையில் கலந்து வீணாகியது.
இது தொடர்பாக பொதுமக்கள் புகார் அளித்தும், உரிய அதிகாரிகள் நிகழ்விடத்திற்கு வந்து குழாய் உடைப்பை சரிசெய்வதில் தாமதம் காட்டினர். இதனால், சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக குடிநீர் வீணாக சாக்கடையில் கலந்தது.
கோடைக் காலத்தில் குடிநீர் பற்றாக்குறை நிலவி வரும் வேளையில், நீரை சேமிக்க அதிகாரிகள் அலட்சியம் காட்டுவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.