குழாய் உடைப்பால் வீணாகிய குடிநீர் : தகவல் கொடுத்தும் அலட்சியம் காட்டிய அதிகாரிகள்

திருப்பூர் : திருப்பூரில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாமதம் காட்டியது பொதுமக்களை அதிருப்தியில் ஆழ்த்தியது.

திருப்பூர் : திருப்பூரில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாமதம் காட்டியது பொதுமக்களை அதிருப்தியில் ஆழ்த்தியது. 



திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் இரண்டாம் திட்ட குடிநீர் மேட்டுப்பாளையத்திலிருந்து குழாய் வழியாக கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. திருமுருகன்பூண்டி பகுதியில் இத்திட்டக் குடிநீர் வரும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வெளியேறி சாக்கடையில் கலந்து வீணாகியது. 

இது தொடர்பாக பொதுமக்கள் புகார் அளித்தும், உரிய அதிகாரிகள் நிகழ்விடத்திற்கு வந்து குழாய் உடைப்பை சரிசெய்வதில் தாமதம் காட்டினர். இதனால், சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக குடிநீர் வீணாக சாக்கடையில் கலந்தது. 

கோடைக் காலத்தில் குடிநீர் பற்றாக்குறை நிலவி வரும் வேளையில், நீரை சேமிக்க அதிகாரிகள் அலட்சியம் காட்டுவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...