நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகையில் சித்திரைத் தேர் திருவிழா லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகையில் சித்திரைத் தேர் திருவிழா லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
உதகையில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன், காளியம்மன் சித்திரை தேர்த் திருவிழா கடந்த மார்ச் 18-ம் தேதியன்று தொடங்கியது. அன்று முதல் 1 மாதத்திற்கு நாள்தோறும் உபயதாரர்கள் பலர் தங்களது உபய நாட்களில் தேர் பவனி, அன்னதானம், கலை நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக தேர்பவனி இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஆர். அர்ஜூனன் ஆகியோர் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில், அரசு துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
உதகையில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன், காளியம்மன் சித்திரை தேர்த் திருவிழா கடந்த மார்ச் 18-ம் தேதியன்று தொடங்கியது. அன்று முதல் 1 மாதத்திற்கு நாள்தோறும் உபயதாரர்கள் பலர் தங்களது உபய நாட்களில் தேர் பவனி, அன்னதானம், கலை நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக தேர்பவனி இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஆர். அர்ஜூனன் ஆகியோர் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில், அரசு துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.