கோவை : காஷ்மீரில் சிறுமி ஆசிஃபா பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு கோவை நீதிமன்றம் முன்பு பெண் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை : காஷ்மீரில் சிறுமி ஆசிஃபா பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு கோவை நீதிமன்றம் முன்பு பெண் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை நீதிமன்ற வளாகம் முன்பாக திரண்ட 50-க்கும் மேற்பட்ட பெண் வழக்கறிஞர்கள் ஆசிஃபா படுகொலைக்கு நீதி வேண்டும் என கோரி கையில் பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பினர்.
மேலும், ஆசிஃபா படுகொலை சம்பவத்தை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைத்து தினசரி உரிய முறையில் விசாரணை நடத்தி தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதேபோல, உத்தரபிரதேசத்தில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பா.ஜ.க., எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சிறுமி ஆசிஃபா வழக்கில் குற்றவாளிகளை தப்பிக்கவிடாமல் அவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
கோவை நீதிமன்ற வளாகம் முன்பாக திரண்ட 50-க்கும் மேற்பட்ட பெண் வழக்கறிஞர்கள் ஆசிஃபா படுகொலைக்கு நீதி வேண்டும் என கோரி கையில் பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பினர்.
மேலும், ஆசிஃபா படுகொலை சம்பவத்தை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைத்து தினசரி உரிய முறையில் விசாரணை நடத்தி தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதேபோல, உத்தரபிரதேசத்தில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பா.ஜ.க., எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சிறுமி ஆசிஃபா வழக்கில் குற்றவாளிகளை தப்பிக்கவிடாமல் அவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.