கோவையில் நடக்கும் சட்டவிரோத செயல்கள் குறித்து புகார் அளிக்க செல்போன் எண் அறிமுகம்

கோவை மாவட்டத்தில் நடக்கும் சட்டவிரோத செயல்களை தடுக்கும் வகையில், அது தொடர்பான புகார் அளிக்க செல்போன் எண்ணை கோவை மாவட்ட சிறப்பு பிரிவு போலீசார் வெளியிட்டுள்ளனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் நடக்கும் சட்டவிரோத செயல்களை தடுக்கும் வகையில், அது தொடர்பான புகார் அளிக்க செல்போன் எண்ணை கோவை மாவட்ட சிறப்பு பிரிவு போலீசார் வெளியிட்டுள்ளனர்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பு சரக பகுதிகளில் கடந்த சில நாட்களாக சட்டவிரோத சம்பவங்கள் நடைபெறுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன் நொய்யல் ஆற்றில் இருந்து மணல் அள்ளி வரும் போது சமூக ஆர்வலர்கள் லாரியைப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல, பேரூர் பகுதிகளில் சுமார் 4 மாதங்களுக்கு முன்பு தடை செய்யப்பட்ட 3ஆம் நம்பர் லாட்டரிகள் செயல்படுவதாகவும் செய்திகளில் வெளியானது. மேலும், மது விற்பனையும் சட்டவிரோதமாக விற்பனை செய்வதும் அதிகரித்துள்ளது. இந்த சட்டவிரோத சம்பவங்கள் குறித்து கோவை மாவட்ட சிறப்பு பிரிவினர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளனர்.



அதில் கூறியிருப்பதாவது:- கோவை மாவட்ட காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சில பகுதிகளில் ஆன்லைன் லாட்டரி, போலி மது விற்பனை, மணல் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக செய்திகளில் வெளிவருகிறது. ஆகவே, சம்பந்தப்பட்ட காவல்துறையினருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இதில், குற்றத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறும் காவலர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேபோல, கோவை புறநகர் மாவட்ட பொதுமக்கள் சட்ட விரோத செயல்கள் குறித்த அறிந்தால், 94458-46282 என்ற எண்ணிற்கு அழைத்து தகவல்களை அளிக்கலாம். இதில் தகவல் தருபவர்கள் பற்றிய விவரங்கள் ஏதும் தர வேண்டியது இல்லை, இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...