தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதைக் கண்டித்து கிறிஸ்தவ பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம்

கோவை: தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதைக் கண்டித்து கிறிஸ்தவ சிறுபான்மை பேரவை சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை: தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதைக் கண்டித்து கிறிஸ்தவ சிறுபான்மை பேரவை சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாடு முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்கள், கல்வி நிறுவனங்கள் மீதான தாக்குதலை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கிறிஸ்தவ சிறுபான்மை பேரவையினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கிறிஸ்தவ அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, கடந்த 2 ஆண்டுகளாக அதிகரிக்கும் சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், கிறிஸ்தவ அமைப்பினர் குறிவைத்து தாக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து இது போன்ற தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுவதாகக் கூறிய ஆர்ப்பாட்டக்காரர்கள், மத்திய மற்றும் மாநில அரசுகள் இந்த தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட சிறுபான்மையினர் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், சிறுமி ஆசிபா கொலை குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனித நேய ஜனநாயக கட்சி, வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா, தந்தை பெரியார் திராவிட கழகம் உள்ளிட்ட ஏராளமான கட்சிகள் மற்றும் அமைப்புகள் கலந்து கொண்டன.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...