நீலகிரி: கோடை சீசனையொட்டி உதகை வரும் சுற்றுலா பயணிகள் குறைந்த கட்டணத்தில் சுற்றுலா மையங்களைக் காண ஏதுவாக சீசன் கால சிறப்பு சுற்றுப் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.
நீலகிரி: கோடை சீசனையொட்டி உதகை வரும் சுற்றுலா பயணிகள் குறைந்த கட்டணத்தில் சுற்றுலா மையங்களைக் காண ஏதுவாக சீசன் கால சிறப்பு சுற்றுப் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் சிறப்பு சுற்றுப் பேருந்து சேவை தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா, தேயிலை பூங்கா, தேயிலை அருங்காட்சியகம், படகு இல்லம் ஆகிய சுற்றுலா மையங்களைப் பார்வையிடும் வகையில் இயக்கப்படுகிறது.

இந்த பேருந்து பயணிக்க பெரியவர்களுக்கு ரூ. 100-ம், சிறியவர்களுக்கு ரூ.50-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஒரு முறை மட்டும் பயணச்சீட்டு எடுத்து அன்றைய நாள் முழுவதும் அவரவர் நேரத்திற்கேற்ப சுற்றுலா மையங்களைப் பார்வையிட்டு, பயணித்து கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சிறப்பு சுற்றுப் பேருந்து சேவை பயணிகளின் நெரிசலுக்கேற்ப கூடுதலாக இயக்க போக்குவரத்து கழகம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது. காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

நீலகிரி மாவட்டம் உதகை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் சிறப்பு சுற்றுப் பேருந்து சேவை தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா, தேயிலை பூங்கா, தேயிலை அருங்காட்சியகம், படகு இல்லம் ஆகிய சுற்றுலா மையங்களைப் பார்வையிடும் வகையில் இயக்கப்படுகிறது.

இந்த பேருந்து பயணிக்க பெரியவர்களுக்கு ரூ. 100-ம், சிறியவர்களுக்கு ரூ.50-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஒரு முறை மட்டும் பயணச்சீட்டு எடுத்து அன்றைய நாள் முழுவதும் அவரவர் நேரத்திற்கேற்ப சுற்றுலா மையங்களைப் பார்வையிட்டு, பயணித்து கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சிறப்பு சுற்றுப் பேருந்து சேவை பயணிகளின் நெரிசலுக்கேற்ப கூடுதலாக இயக்க போக்குவரத்து கழகம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது. காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.