கோடை சீசனையொட்டி உதகையில் சிறப்பு சுற்றுப் பேருந்து சேவை தொடக்கம்

நீலகிரி: கோடை சீசனையொட்டி உதகை வரும் சுற்றுலா பயணிகள் குறைந்த கட்டணத்தில் சுற்றுலா மையங்களைக் காண ஏதுவாக சீசன் கால சிறப்பு சுற்றுப் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

நீலகிரி: கோடை சீசனையொட்டி உதகை வரும் சுற்றுலா பயணிகள் குறைந்த கட்டணத்தில் சுற்றுலா மையங்களைக் காண ஏதுவாக சீசன் கால சிறப்பு சுற்றுப் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.



நீலகிரி மாவட்டம் உதகை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் சிறப்பு சுற்றுப் பேருந்து சேவை தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா, தேயிலை பூங்கா, தேயிலை அருங்காட்சியகம், படகு இல்லம் ஆகிய சுற்றுலா மையங்களைப் பார்வையிடும் வகையில் இயக்கப்படுகிறது.



இந்த பேருந்து பயணிக்க பெரியவர்களுக்கு ரூ. 100-ம், சிறியவர்களுக்கு ரூ.50-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஒரு முறை மட்டும் பயணச்சீட்டு எடுத்து அன்றைய நாள் முழுவதும் அவரவர் நேரத்திற்கேற்ப சுற்றுலா மையங்களைப் பார்வையிட்டு, பயணித்து கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சிறப்பு சுற்றுப் பேருந்து சேவை பயணிகளின் நெரிசலுக்கேற்ப கூடுதலாக இயக்க போக்குவரத்து கழகம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது. காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...