பிரபல நிறுவனத்தின் முத்திரை மோசடி : நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உரிமையாளர் புகார்

கோவை : பிரபல தண்ணீர் குழாய் தயாரிக்கும் நிறுவனத்தின் குறியீட்டை பயன்படுத்தி போலி குழாய் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

கோவை : பிரபல தண்ணீர் குழாய் தயாரிக்கும் நிறுவனத்தின் குறியீட்டை பயன்படுத்தி போலி குழாய் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. 

அவான் பிளாஸ்டிக் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் என்ற நிறுவனம் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக பி.வி.சி. குழாய் தயாரித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் குறியீட்டை பயன்படுத்தி போலி பி.வி.சி. குழாய்கள் தயாரிக்கப்பட்டு சந்தையில் விற்கப்பட்டு வருவதாக அந்நிறுவனத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில், கோவை மாவட்டம் தீத்திபாளையம் அருகே லாரியில் (TN 72 AA 4646) வெள்ளை நிற பி.வி.சி. குழாய்கள் ஏற்றப்படுவதைப் பார்த்த அவான் பிளாஸ்டிக் லிமிடெட்டின் மேலாளர் பேரூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதில் அவர் கூறியதாவது :- எங்கள் நிறுவனத்தில் வெள்ளை நிற குழாய்கள் தயாரிப்பதில்லை. எங்கள் நிறுவனத்தை பயன்படுத்தி போலிக்கள் தயாரிக்கப்படுவது தங்கள் நிறுவனத்தின் நற்பெயரை கலங்கப்படுத்துகிறது. தற்போது, எங்கள் குறியீட்டை பயன்படுத்தி பி.வி.சி. குழாய்களை உற்பத்தி செய்து விற்று வரும் போலி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப் புகார் கொடுத்துள்ளேன். இது தொடர்பாக போலீசார் போலியை ஏற்றி வந்தவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், அரசு திட்டப்பணிகளுக்காக இந்தப் பைப்புகள் கொண்டு வந்ததாக சொல்லப்படுகிறது. ஆகவே, போலீசார் இந்த விவகாரத்தில் உரிய முறையில் விசாரணை செய்வது போல தெரியவில்லை, என்றார்

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...