கோவை : பிரபல தண்ணீர் குழாய் தயாரிக்கும் நிறுவனத்தின் குறியீட்டை பயன்படுத்தி போலி குழாய் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
கோவை : பிரபல தண்ணீர் குழாய் தயாரிக்கும் நிறுவனத்தின் குறியீட்டை பயன்படுத்தி போலி குழாய் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அவான் பிளாஸ்டிக் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் என்ற நிறுவனம் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக பி.வி.சி. குழாய் தயாரித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் குறியீட்டை பயன்படுத்தி போலி பி.வி.சி. குழாய்கள் தயாரிக்கப்பட்டு சந்தையில் விற்கப்பட்டு வருவதாக அந்நிறுவனத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில், கோவை மாவட்டம் தீத்திபாளையம் அருகே லாரியில் (TN 72 AA 4646) வெள்ளை நிற பி.வி.சி. குழாய்கள் ஏற்றப்படுவதைப் பார்த்த அவான் பிளாஸ்டிக் லிமிடெட்டின் மேலாளர் பேரூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதில் அவர் கூறியதாவது :- எங்கள் நிறுவனத்தில் வெள்ளை நிற குழாய்கள் தயாரிப்பதில்லை. எங்கள் நிறுவனத்தை பயன்படுத்தி போலிக்கள் தயாரிக்கப்படுவது தங்கள் நிறுவனத்தின் நற்பெயரை கலங்கப்படுத்துகிறது. தற்போது, எங்கள் குறியீட்டை பயன்படுத்தி பி.வி.சி. குழாய்களை உற்பத்தி செய்து விற்று வரும் போலி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப் புகார் கொடுத்துள்ளேன். இது தொடர்பாக போலீசார் போலியை ஏற்றி வந்தவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், அரசு திட்டப்பணிகளுக்காக இந்தப் பைப்புகள் கொண்டு வந்ததாக சொல்லப்படுகிறது. ஆகவே, போலீசார் இந்த விவகாரத்தில் உரிய முறையில் விசாரணை செய்வது போல தெரியவில்லை, என்றார்
அவான் பிளாஸ்டிக் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் என்ற நிறுவனம் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக பி.வி.சி. குழாய் தயாரித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் குறியீட்டை பயன்படுத்தி போலி பி.வி.சி. குழாய்கள் தயாரிக்கப்பட்டு சந்தையில் விற்கப்பட்டு வருவதாக அந்நிறுவனத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில், கோவை மாவட்டம் தீத்திபாளையம் அருகே லாரியில் (TN 72 AA 4646) வெள்ளை நிற பி.வி.சி. குழாய்கள் ஏற்றப்படுவதைப் பார்த்த அவான் பிளாஸ்டிக் லிமிடெட்டின் மேலாளர் பேரூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதில் அவர் கூறியதாவது :- எங்கள் நிறுவனத்தில் வெள்ளை நிற குழாய்கள் தயாரிப்பதில்லை. எங்கள் நிறுவனத்தை பயன்படுத்தி போலிக்கள் தயாரிக்கப்படுவது தங்கள் நிறுவனத்தின் நற்பெயரை கலங்கப்படுத்துகிறது. தற்போது, எங்கள் குறியீட்டை பயன்படுத்தி பி.வி.சி. குழாய்களை உற்பத்தி செய்து விற்று வரும் போலி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப் புகார் கொடுத்துள்ளேன். இது தொடர்பாக போலீசார் போலியை ஏற்றி வந்தவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், அரசு திட்டப்பணிகளுக்காக இந்தப் பைப்புகள் கொண்டு வந்ததாக சொல்லப்படுகிறது. ஆகவே, போலீசார் இந்த விவகாரத்தில் உரிய முறையில் விசாரணை செய்வது போல தெரியவில்லை, என்றார்