நாட்டின் பொருளாதாரத்தையும், விவசாயத்தையும் உயர்த்தும் வகையில் இந்த ஆண்டுக்கான மழைப் பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தையும், விவசாயத்தையும் உயர்த்தும் வகையில் இந்த ஆண்டுக்கான மழைப் பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை மைய இயக்குநர் கே.ஜே. ரமேஷ் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்த ஆண்டு இந்தியாவில் வழக்கமான மழைப்பொழிவே காணப்படும். இந்த ஆண்டு சராசரியாக 97 சதவீதம் மழை பதிவாக வாய்ப்புள்ளது.
கடந்த 50 ஆண்டுகளில் 96 சதவீதம் முதல் 104 சதவீதம் வரையிலான மழை பதிவாகியது. ஜுன் மற்றும் செப்டம்பர் மாதம் வரையில் மிதமான மழைப் பொழிவு காணப்படும். இதன்மூலம், இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் விவசாயத்தில் வளர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த மழையின் மூலம், விவசாயிகள் சிறிதளவு பாசன வசதியை பெறுவர்," எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வானிலை மைய இயக்குநர் கே.ஜே. ரமேஷ் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்த ஆண்டு இந்தியாவில் வழக்கமான மழைப்பொழிவே காணப்படும். இந்த ஆண்டு சராசரியாக 97 சதவீதம் மழை பதிவாக வாய்ப்புள்ளது.
கடந்த 50 ஆண்டுகளில் 96 சதவீதம் முதல் 104 சதவீதம் வரையிலான மழை பதிவாகியது. ஜுன் மற்றும் செப்டம்பர் மாதம் வரையில் மிதமான மழைப் பொழிவு காணப்படும். இதன்மூலம், இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் விவசாயத்தில் வளர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த மழையின் மூலம், விவசாயிகள் சிறிதளவு பாசன வசதியை பெறுவர்," எனத் தெரிவித்துள்ளார்.