அ.தி.மு.க., ஆட்சியில் கோவை மாவட்டம் பின்தங்கியுள்ளது : தி.மு.க., எம்.எல்.ஏ., நா. கார்த்திக்

கோவை : அ.தி.மு.க., ஆட்சியில் ஒட்டமொத்த வளர்ச்சியில் கோவை மாவட்டம் பின் தங்கியிருப்பதாக தி.மு.க., மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.,வுமான நா.கார்த்திக் தெரிவித்தார்.

கோவை : அ.தி.மு.க., ஆட்சியில் ஒட்டமொத்த வளர்ச்சியில் கோவை மாவட்டம் பின் தங்கியிருப்பதாக தி.மு.க., மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.,வுமான நா.கார்த்திக் தெரிவித்தார். 

பீளமேடு பகுதியில் உள்ள பூங்காவை தெற்கு மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் எம்.எல்.ஏ., இன்று ஆய்வு மேற்கொண்டார். பூங்காவில் புதர்கள் மண்டியும், சிறுவர் விளையாட்டு சாதனங்கள் சேதம் அடைந்திருப்பதையும் பார்வையிட்டார். 

இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், "கடந்த 2010-ம் ஆண்டு கோவையில் செம்மொழி மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டின்போது, கோவை மாநகராட்சி முழுவதும் 100-க்கும் மேற்பட்ட பூங்காக்கள் அமைக்கப்பட்டது. இந்த பூங்காக்களும், பழைய பூங்காக்களையும் சேர்த்து பராமரிக்க ஒப்பந்த தொழிலாளர்கள் அமைக்கப்பட்டு, பூங்காக்கள் பராமரிக்கப்பட்டு வந்தது. இவைகளை அந்தந்தப் பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். 

கடந்த 2 ஆண்டு காலமாக இந்தப் பூங்காக்கள் பராமரிக்கப்படாமல், புதர்கள் மண்டியும், விஷப் பூச்சிகளின் இருப்பிடமாக மாறியுள்ளது. தி.மு.க., சார்பில் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பூங்காக்கள் தொடர்பாக மாநகராட்சி ஆணையாளரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எடுபுடி அரசான எடப்பாடி அரசு தோல்வியை கண்டுள்ளது என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது. உள்ளாட்சித்துறை முற்றிலுமாக செயலிழந்து உள்ளது. 

உள்ளாட்சித்துறை அமைச்சராக இருக்கும் எஸ்.பி. வேலுமணி எந்த நடவடிக்கையோ அக்கறை காட்டுவதில்லை. கோவை மாநகராட்சி முழுவதும் குப்பைகள் மலை போல் தேங்கியுள்ளது. ஒட்டுமொத்தமாக கோவை மாவட்டம் வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியுள்ளது. கோவை மாநகராட்சி தத்தளித்து வருகிறது," என்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...