கோவை : அ.தி.மு.க., ஆட்சியில் ஒட்டமொத்த வளர்ச்சியில் கோவை மாவட்டம் பின் தங்கியிருப்பதாக தி.மு.க., மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.,வுமான நா.கார்த்திக் தெரிவித்தார்.
கோவை : அ.தி.மு.க., ஆட்சியில் ஒட்டமொத்த வளர்ச்சியில் கோவை மாவட்டம் பின் தங்கியிருப்பதாக தி.மு.க., மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.,வுமான நா.கார்த்திக் தெரிவித்தார்.
பீளமேடு பகுதியில் உள்ள பூங்காவை தெற்கு மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் எம்.எல்.ஏ., இன்று ஆய்வு மேற்கொண்டார். பூங்காவில் புதர்கள் மண்டியும், சிறுவர் விளையாட்டு சாதனங்கள் சேதம் அடைந்திருப்பதையும் பார்வையிட்டார்.
இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், "கடந்த 2010-ம் ஆண்டு கோவையில் செம்மொழி மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டின்போது, கோவை மாநகராட்சி முழுவதும் 100-க்கும் மேற்பட்ட பூங்காக்கள் அமைக்கப்பட்டது. இந்த பூங்காக்களும், பழைய பூங்காக்களையும் சேர்த்து பராமரிக்க ஒப்பந்த தொழிலாளர்கள் அமைக்கப்பட்டு, பூங்காக்கள் பராமரிக்கப்பட்டு வந்தது. இவைகளை அந்தந்தப் பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
கடந்த 2 ஆண்டு காலமாக இந்தப் பூங்காக்கள் பராமரிக்கப்படாமல், புதர்கள் மண்டியும், விஷப் பூச்சிகளின் இருப்பிடமாக மாறியுள்ளது. தி.மு.க., சார்பில் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பூங்காக்கள் தொடர்பாக மாநகராட்சி ஆணையாளரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எடுபுடி அரசான எடப்பாடி அரசு தோல்வியை கண்டுள்ளது என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது. உள்ளாட்சித்துறை முற்றிலுமாக செயலிழந்து உள்ளது.
உள்ளாட்சித்துறை அமைச்சராக இருக்கும் எஸ்.பி. வேலுமணி எந்த நடவடிக்கையோ அக்கறை காட்டுவதில்லை. கோவை மாநகராட்சி முழுவதும் குப்பைகள் மலை போல் தேங்கியுள்ளது. ஒட்டுமொத்தமாக கோவை மாவட்டம் வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியுள்ளது. கோவை மாநகராட்சி தத்தளித்து வருகிறது," என்றார்.
பீளமேடு பகுதியில் உள்ள பூங்காவை தெற்கு மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் எம்.எல்.ஏ., இன்று ஆய்வு மேற்கொண்டார். பூங்காவில் புதர்கள் மண்டியும், சிறுவர் விளையாட்டு சாதனங்கள் சேதம் அடைந்திருப்பதையும் பார்வையிட்டார்.
இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், "கடந்த 2010-ம் ஆண்டு கோவையில் செம்மொழி மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டின்போது, கோவை மாநகராட்சி முழுவதும் 100-க்கும் மேற்பட்ட பூங்காக்கள் அமைக்கப்பட்டது. இந்த பூங்காக்களும், பழைய பூங்காக்களையும் சேர்த்து பராமரிக்க ஒப்பந்த தொழிலாளர்கள் அமைக்கப்பட்டு, பூங்காக்கள் பராமரிக்கப்பட்டு வந்தது. இவைகளை அந்தந்தப் பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
கடந்த 2 ஆண்டு காலமாக இந்தப் பூங்காக்கள் பராமரிக்கப்படாமல், புதர்கள் மண்டியும், விஷப் பூச்சிகளின் இருப்பிடமாக மாறியுள்ளது. தி.மு.க., சார்பில் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பூங்காக்கள் தொடர்பாக மாநகராட்சி ஆணையாளரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எடுபுடி அரசான எடப்பாடி அரசு தோல்வியை கண்டுள்ளது என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது. உள்ளாட்சித்துறை முற்றிலுமாக செயலிழந்து உள்ளது.
உள்ளாட்சித்துறை அமைச்சராக இருக்கும் எஸ்.பி. வேலுமணி எந்த நடவடிக்கையோ அக்கறை காட்டுவதில்லை. கோவை மாநகராட்சி முழுவதும் குப்பைகள் மலை போல் தேங்கியுள்ளது. ஒட்டுமொத்தமாக கோவை மாவட்டம் வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியுள்ளது. கோவை மாநகராட்சி தத்தளித்து வருகிறது," என்றார்.