ஹால்மார்க் முத்திரைகள் கொண்ட நகைகளை வாங்குமாறு வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தல்

கோவை: அட்சய திருதியை முன்னிட்டு நகைகளை வாங்க வாங்குபவர்கள் ஹால்மார்க் முத்திரை உள்ள நகைகளை வாங்குமாறு வாடிக்கையாளர்களுக்கு இந்திய தரச்சான்று நிறுவனம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கோவை: அட்சய திருதியை முன்னிட்டு நகைகளை வாங்க வாங்குபவர்கள் ஹால்மார்க் முத்திரை உள்ள நகைகளை வாங்குமாறு வாடிக்கையாளர்களுக்கு இந்திய தரச்சான்று நிறுவனம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வரும் புதன்கிழமை அட்சய திருதியை தினம் வருகிறது. அன்றைய நாளில் தங்க நகை வாங்கினால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை காரணமாக பெரும்பாலானோர் நகை வாங்குவது வழக்கம். இந்நிலையில், பொதுமக்கள் உரிய அங்கீகாரம் பெற்ற நகைக்கடைகளுக்கு சென்று தரச்சான்று பெற்ற நகைகளை வாங்க வேண்டும் என்ற நோக்கில் இந்திய தரச்சான்று நிறுவனம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

இது தொடர்பாக, இந்திய தரச்சான்று நிறுவனத்தின் கோவை மாவட்ட தலைமை அதிகாரி கலைவாணன் கூறுகையில், "பி.ஐ.எஸ் (BIS) நிறுவனத்திடம் தரச்சான்று பெற்ற நகைகடையை தரச்சான்றுடன் கூடிய பலகையை வைத்து உரிய அங்கீகாரம் பெற்ற நகைக் கடையா என நாம் கண்டறியலாம். ஒவ்வொரு நகைக்கும் 4 சான்றுகள் தரப்படும். நான்கு சான்றுகளும் இருக்கும் நகைகளைத் தான் ஹால்மார்க் முத்திரை பதித்த நகைகளாகும். இதில் ஹால்மார்க் முத்திரை பதித்த நகைகளை தான் விற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லாததால் பெரும்பாலான நகைக் கடைகளில் தரக்குறைவான தங்கம் விற்கப்படுப்படுகிறது.

ஹால்மார்க் முத்திரையை நகைக்கடைகள் தவறான முறையில் பயன்படுத்தினால், ரூ. 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும், 1 வருடம் வரை சிறை தண்டனைக் கிடைக்கும். 4 முத்திரைகளும் வாங்கும் நகைகளில் இருக்கிறதா என வாடிக்கையாளர்கள் சோதித்து பார்த்து வாங்க வேண்டும்," என்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...