மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பகுதியில் பெய்த மழையால் அங்குள்ள குட்டைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பகுதியில் பெய்த மழையால் அங்குள்ள குட்டைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை மழை தொடர்வதால் காய்ந்து போன குளம் குட்டைகளில் நீர் நிரம்பி வருகிறது. கடந்த வாரத்தில் தொடர்ந்து மாலை நேரங்களில் மழை பெய்து வந்த நிலையில் நேற்று இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
கடும் வெப்பம் காரணமாக வறண்டுபோன குளம் மற்றும் குட்டைகளில் இதனால், மீண்டும் தண்ணீர் நிரம்பி காட்சியளிக்கின்றது. மழை காரணமாக மேட்டுப்பாளையம் பகுதியில் வாழை, பாக்கு, கரும்பு, தென்னை போன்ற விவசாயம் வறட்சியின் பிடியில் இருந்து தப்பியுள்ளது.
மேலும், தொடர் மழையால் நிலத்தடி நீர்மட்டம் ஓரளவு உயர்ந்து பாசன கிணறுகளில் தண்ணீர் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மழை காரணமாக மேட்டுப்பாளையம் வனச் சரகதிர்க்கு உட்பட்ட காடுகளிலும் வறட்சி நீங்கி விலங்குகள் தாகம் தீர்க்கும் வனக் குட்டைகள், நீரோடைகள் மற்றும் தடுப்பணைகளில் நீர் நிரம்பி வருகின்றன.

இதனால் மான், காட்டெருமைகள் போன்ற உயிரினங்களுக்கான தண்ணீர் தேவை வனத்திற்குள்ளேயே பூர்த்தியாகியுள்ளது.