கோடை மழையால் நிரம்பிய மேட்டுப்பாளையம் பகுதி குட்டைகள்: விவசாயிகள் மகிழ்ச்சி

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பகுதியில் பெய்த மழையால் அங்குள்ள குட்டைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பகுதியில் பெய்த மழையால் அங்குள்ள குட்டைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை மழை தொடர்வதால் காய்ந்து போன குளம் குட்டைகளில் நீர் நிரம்பி வருகிறது. கடந்த வாரத்தில் தொடர்ந்து மாலை நேரங்களில் மழை பெய்து வந்த நிலையில் நேற்று இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

கடும் வெப்பம் காரணமாக வறண்டுபோன குளம் மற்றும் குட்டைகளில் இதனால், மீண்டும் தண்ணீர் நிரம்பி காட்சியளிக்கின்றது. மழை காரணமாக மேட்டுப்பாளையம் பகுதியில் வாழை, பாக்கு, கரும்பு, தென்னை போன்ற விவசாயம் வறட்சியின் பிடியில் இருந்து தப்பியுள்ளது.

மேலும், தொடர் மழையால் நிலத்தடி நீர்மட்டம் ஓரளவு உயர்ந்து பாசன கிணறுகளில் தண்ணீர் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மழை காரணமாக மேட்டுப்பாளையம் வனச் சரகதிர்க்கு உட்பட்ட காடுகளிலும் வறட்சி நீங்கி விலங்குகள் தாகம் தீர்க்கும் வனக் குட்டைகள், நீரோடைகள் மற்றும் தடுப்பணைகளில் நீர் நிரம்பி வருகின்றன.



இதனால் மான், காட்டெருமைகள் போன்ற உயிரினங்களுக்கான தண்ணீர் தேவை வனத்திற்குள்ளேயே பூர்த்தியாகியுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...