கோவை: கருமத்தம்பட்டி பகுதியில் சட்ட விரோதமாக மது விற்கப்படுவதாகவும், அதற்கு அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாக கூறி தமிழக விவசாய சங்கத்தினர் தாம்பூலம் தட்டோடு வந்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தனர்.
கோவை: கருமத்தம்பட்டி பகுதியில் சட்ட விரோதமாக மது விற்கப்படுவதாகவும், அதற்கு அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாக கூறி தமிழக விவசாய சங்கத்தினர் தாம்பூலம் தட்டோடு வந்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தனர்.

மக்கள் போராட்டங்களால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நிலையில், கருமத்தம்பட்டியில் 24 மணி நேரமும் ஹோட்டல்கள், தாபாக்கள், விவசாய நிலங்களில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. இதனைத் தடுக்க கோரி விவசாயிகள் வெற்றிலை பாக்கு, பழங்களை தாம்பூலத்தில் எடுத்து வந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

சட்ட விரோத மது விற்பனையைத் தடுக்கக்கோரி பலமுறை காவல் துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டினர்.

மக்கள் போராட்டங்களால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நிலையில், கருமத்தம்பட்டியில் 24 மணி நேரமும் ஹோட்டல்கள், தாபாக்கள், விவசாய நிலங்களில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. இதனைத் தடுக்க கோரி விவசாயிகள் வெற்றிலை பாக்கு, பழங்களை தாம்பூலத்தில் எடுத்து வந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

சட்ட விரோத மது விற்பனையைத் தடுக்கக்கோரி பலமுறை காவல் துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டினர்.