கோவை: தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலமாக ரூ.26.99 கோடி மதிப்பில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கோவையில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான பணியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார்.
கோவை: தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலமாக ரூ.26.99 கோடி மதிப்பில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கோவையில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான பணியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார்.
கோவை மாநகராட்சியில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் மூலம் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ், செல்வபுரம், கல்லாமேடு, ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் ரூ.26.99 கோடி மதிப்பில் 305 அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டும் பணிகளை நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார்.
அதன்படி, செல்வபுரம் பகுதியில் ரூ.11.07 கோடி மதிப்பில் 120 குடியிருப்புகள், கல்லாமேடு பகுதியில் ரூ.7.95 கோடி மதிப்பில் 100 குடியிருப்புகள், மெக்ரிக்கர் சாலை ஆர்.எஸ்.புரத்தில் ரூ.7.97 கோடி மதிப்பில் 85 குடியிருப்புகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
மேலும், அடுக்குமாடி குடியிருப்புகளின் பயனாளிகள் 305 பேருக்கு வீடுகளுக்கான அடையாள அட்டைகளை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கினார்.

கோவை மாநகராட்சியில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் மூலம் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ், செல்வபுரம், கல்லாமேடு, ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் ரூ.26.99 கோடி மதிப்பில் 305 அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டும் பணிகளை நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார்.
அதன்படி, செல்வபுரம் பகுதியில் ரூ.11.07 கோடி மதிப்பில் 120 குடியிருப்புகள், கல்லாமேடு பகுதியில் ரூ.7.95 கோடி மதிப்பில் 100 குடியிருப்புகள், மெக்ரிக்கர் சாலை ஆர்.எஸ்.புரத்தில் ரூ.7.97 கோடி மதிப்பில் 85 குடியிருப்புகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
மேலும், அடுக்குமாடி குடியிருப்புகளின் பயனாளிகள் 305 பேருக்கு வீடுகளுக்கான அடையாள அட்டைகளை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கினார்.
