நொய்யலில் மணல் திருட்டு நடைபெற்றால் கடும் நடவடிக்கை பாயும்: காவல் துறை எச்சரிக்கை

கோவை: நொய்யலில் மணல் திருட்டு நடைபெற்றால் கடும் நடவடிக்கை பாயும் என்று பேரூர் துணை காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவை: நொய்யலில் மணல் திருட்டு நடைபெற்றால் கடும் நடவடிக்கை பாயும் என்று பேரூர் துணை காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த வாரம் நொய்யல் ஆற்றுப்படுகையில் இருந்து சட்டவிரோதமாக மணல் அள்ளும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நொய்யலில் மணல் அள்ளக்கூடாது என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் பொருட்டு கூட்டம் ஒன்று நடைபெற்றது.



நொய்யல் பாதுகாப்பு குழுவினர் ஒருங்கிணைத்த இந்த கூட்டம் மாதவராயபுரம் பகுதியில் நடைபெற்ற இந்த கூடத்தில் மதவராயபுரம், ஆலந்துறை, தொம்பிளிபளையம் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள், வருவாய்த் துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.



அப்போது பேரூர் துணை காவல் கண்காணிப்பாளர் வேல்முருகன் பேசுகையில், "நொய்யலில் இருந்து சட்ட விரோதமாக மணல் எடுத்தால் கடும் நடவடிக்கை பாயும். கழுதை, மாட்டுவண்டி போன்றவை மூலம் மணல் திருட்டு நடைபெறுவதாக புகார்கள் எழுந்துள்ளது. உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இனி நொய்யல் ஆற்றுப்படுகையில் இரவு நேர ரோந்து பணியில் போலீசார் ஈடுபட உள்ளனர். மேலும், அந்த பகுதி இளைஞர்களும் போலீசாருக்கு உதவி செய்ய உள்ளனர்." என்றார்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...