கோவை: நொய்யலில் மணல் திருட்டு நடைபெற்றால் கடும் நடவடிக்கை பாயும் என்று பேரூர் துணை காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவை: நொய்யலில் மணல் திருட்டு நடைபெற்றால் கடும் நடவடிக்கை பாயும் என்று பேரூர் துணை காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த வாரம் நொய்யல் ஆற்றுப்படுகையில் இருந்து சட்டவிரோதமாக மணல் அள்ளும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நொய்யலில் மணல் அள்ளக்கூடாது என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் பொருட்டு கூட்டம் ஒன்று நடைபெற்றது.

நொய்யல் பாதுகாப்பு குழுவினர் ஒருங்கிணைத்த இந்த கூட்டம் மாதவராயபுரம் பகுதியில் நடைபெற்ற இந்த கூடத்தில் மதவராயபுரம், ஆலந்துறை, தொம்பிளிபளையம் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள், வருவாய்த் துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது பேரூர் துணை காவல் கண்காணிப்பாளர் வேல்முருகன் பேசுகையில், "நொய்யலில் இருந்து சட்ட விரோதமாக மணல் எடுத்தால் கடும் நடவடிக்கை பாயும். கழுதை, மாட்டுவண்டி போன்றவை மூலம் மணல் திருட்டு நடைபெறுவதாக புகார்கள் எழுந்துள்ளது. உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இனி நொய்யல் ஆற்றுப்படுகையில் இரவு நேர ரோந்து பணியில் போலீசார் ஈடுபட உள்ளனர். மேலும், அந்த பகுதி இளைஞர்களும் போலீசாருக்கு உதவி செய்ய உள்ளனர்." என்றார்.

கடந்த வாரம் நொய்யல் ஆற்றுப்படுகையில் இருந்து சட்டவிரோதமாக மணல் அள்ளும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நொய்யலில் மணல் அள்ளக்கூடாது என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் பொருட்டு கூட்டம் ஒன்று நடைபெற்றது.

நொய்யல் பாதுகாப்பு குழுவினர் ஒருங்கிணைத்த இந்த கூட்டம் மாதவராயபுரம் பகுதியில் நடைபெற்ற இந்த கூடத்தில் மதவராயபுரம், ஆலந்துறை, தொம்பிளிபளையம் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள், வருவாய்த் துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது பேரூர் துணை காவல் கண்காணிப்பாளர் வேல்முருகன் பேசுகையில், "நொய்யலில் இருந்து சட்ட விரோதமாக மணல் எடுத்தால் கடும் நடவடிக்கை பாயும். கழுதை, மாட்டுவண்டி போன்றவை மூலம் மணல் திருட்டு நடைபெறுவதாக புகார்கள் எழுந்துள்ளது. உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இனி நொய்யல் ஆற்றுப்படுகையில் இரவு நேர ரோந்து பணியில் போலீசார் ஈடுபட உள்ளனர். மேலும், அந்த பகுதி இளைஞர்களும் போலீசாருக்கு உதவி செய்ய உள்ளனர்." என்றார்.
