காந்திபார்க் பகுதியில் புதுப்பிக்கப்பட்ட நீச்சல் குளம் திறப்பு

கோவை: காந்திபார்க் பகுதியில் ரூ. 1.87 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட நீச்சல் குளத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று திறந்து வைத்தார்.


கோவை: காந்திபார்க் பகுதியில் ரூ. 1.87 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட நீச்சல் குளத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று திறந்து வைத்தார்.



மாநகராட்சிக்குட்பட்ட 24-வது வார்டு காந்தி பூங்கா பகுதியில் மாநகராட்சிக்குச் சொந்தமான நீச்சல் குளம் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், அந்த நீச்சல் குளத்தை புதுப்பிக்கும் பணி கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இதற்காக மாநகராட்சி பொது நிதியில் இருந்து ரூ. 1.87 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நீச்சல் குளத்தை இன்று தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார்.

தற்போது அந்த நீச்சல் குளத்தின் பராமரிப்பு பணிகள் சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் மேற்கொள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. முன்பு 12 அடியாக ஆழமாக இருந்த நீச்சல் குளம் 4.5 அடியாக மாற்றப்பட்டது. மேலும், 12.6 மீட்டர் அகலத்திற்கும், 25.6 மீட்டர் நீளம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.



குழந்தைகளுக்கென இரண்டடி ஆழத்தில் குட்டி நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. பெரிய நீச்சல் குளத்தில் குளிக்க ஒரு மணி நேரத்திற்கு ரூ.50-ம் சிறிய நீச்சல் குளத்தில் குளிப்பதற்கு ரூ.25-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.



கோடை விடுமுறை விடப்பட்டுள்ள இந்த நேரத்தில், நீச்சல் குளம் திறக்கப்பட்டது மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...