கோவை: கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.
கோவை: கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.
கோவையில் முன்னதாகவே தொடங்கிய கோடை வெயில் வாட்டிவதைத்து வந்தது. இதனால், மதிய நேரங்களில் மக்கள் வெளியே செல்ல முடியாமல் அவதியுற்று வந்தனர். கடந்த மாத தொடக்கத்தில் கோவை மாநகர மற்றும் புறநகர பகுதிகளில் அவ்வப்போது லேசான மழை பெய்தது. ஆனால், நடப்பு மாதத்தில் மாநகர பகுதிகளில் மழை பெய்யவில்லை. மாறாக வெயில் சுட்டெரித்தது.
இந்த நிலையில், இன்று காரமடை மற்றும் பெரியநாயக்கன்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மாநகர பகுதிகளை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் அங்கும் மழை பெய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோவையில் முன்னதாகவே தொடங்கிய கோடை வெயில் வாட்டிவதைத்து வந்தது. இதனால், மதிய நேரங்களில் மக்கள் வெளியே செல்ல முடியாமல் அவதியுற்று வந்தனர். கடந்த மாத தொடக்கத்தில் கோவை மாநகர மற்றும் புறநகர பகுதிகளில் அவ்வப்போது லேசான மழை பெய்தது. ஆனால், நடப்பு மாதத்தில் மாநகர பகுதிகளில் மழை பெய்யவில்லை. மாறாக வெயில் சுட்டெரித்தது.
இந்த நிலையில், இன்று காரமடை மற்றும் பெரியநாயக்கன்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மாநகர பகுதிகளை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் அங்கும் மழை பெய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
