கர்நாடக காய்கறிகள் வரத்து அதிகரிப்பு : நீலகிரி காய்கறிகள் விலை சரிவு

நீலகிரி: காய்கறி விளைச்சல் அதிகரிப்பு மற்றும் கர்நாடகாவிலிருந்து வரத்து அதிகரித்துள்ளதால், நீலகிரி மாவட்ட காய்கறிகளின் விலை கடுமையாக சரிந்துள்ளது.


நீலகிரி: காய்கறி விளைச்சல் அதிகரிப்பு மற்றும் கர்நாடகாவிலிருந்து வரத்து அதிகரித்துள்ளதால், நீலகிரி மாவட்ட காய்கறிகளின் விலை கடுமையாக சரிந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்தாண்டு, தென் மேற்கு பருவ மழை மற்றும் வட கிழக்கு பருவ மழை ஓரளவு பெய்தது. இதனால், மாவட்டத்தில் முக்கிய பயிர்களான உருளைக் கிழங்கு, கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ் அதிகளவில் பயிரிடப்பட்டன. இதன் காரணமாக காய்கறிகளின் வரத்து அதிகரித்தது. இதனால் கடந்தாண்டு உச்சம் தொட்ட காய்கறிகளின் விலை இந்தாண்டு கடுமையாக சரிந்துள்ளது.



மேலும், கர்நாடகா மாநிலத்திலிருந்து காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் நீலகிரியில் விளையும் காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. இதனால், வியாபாரிகள் காய்கறிகளை வாகனங்களில் ஏற்றி, கிராமந்தோறும் விற்பனை செய்து வருகின்றனர். உதகை, கூடலூர் மார்க்கெட்டுக்கு கர்நாடகா மாநிலம் குண்டல்பெட்டிலிருந்து காய்கறி வரத்து வரும் நிலையில், குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் வியாபாரிகள் மேட்டுப்பாளையத்திலிருந்து காய்கறி கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளிலிருந்து மொத்தமாக காய்கறிகளை வாங்கிக்கொண்டு, கோத்தகிரி வரும் வழி நெடுகிலும் உள்ள கிராமங்கள் முதல் குக்கிராமங்களை வரை காய்கறிகளை விற்பனை செய்கின்றனர். விலை சரிவு குறித்து தினசரி சந்தை வியாபாரிகள் கூறுகையில், "கடந்தாண்டு சராசரி மழை பெய்ததால், காய்கறி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விலை குறைந்துள்ளது. முக்கிய காய்கறிகளான உருளைக் கிழங்கு கிலோ ரூ.20-24, பீட்ரூட் ரூ.13-க்கு விலை போனது. கடந்த மாதம் ரூ.70க்கு விலை கேரட், தற்போது ரூ. 20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.



முட்டைக்கோஸ் கிலோ ரூ.15-க்கு, பீன்ஸ் கிலோ ரூ.20, பட்டாணி கிலோ ரூ.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்ததால் பெரும்பாலானோர் காய்கறிகளை அறுவடை செய்தனர். இதனால், வரத்து அதிகரித்தது. மேலும், கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் காய்கறி வரத்து அதிகரித்த காரணத்தால் விலை குறைந்து விட்டது." என்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...