கோவை: சீர் செய் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் பார்வையற்றோருக்கு தேர்வு எழுத உதவும் தன்னார்வலர்களை இணைக்க புதிய மொபைல் 'ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கோவை: சீர் செய் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் பார்வையற்றோருக்கு தேர்வு எழுத உதவும் தன்னார்வலர்களை இணைக்க புதிய மொபைல் 'ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் ஒவ்வொரு தேர்வு எழுதும் பொழுதும் அவர்களுக்காக உறுதுணையாக இருப்பது அவர்களுக்காகத் தேர்வு எழுதும் தன்னார்வலர்கள். ஆனால் பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு நேரடியாக , தேர்வு எழுதும் தன்னார்வலர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை.
இதனால், அவர்களுக்குத் தேர்வு எழுதுவதற்காக ஆட்கள் கிடைக்காததால் தேர்வு எழுதுவது தடைபடுகிறது. எனவே பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளையும் , அவர்களுக்காகத் தேர்வு எழுதும் தன்னார்வலர்களையும் இணைக்கும் வகையில் சீர் செய் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் புதிய மொபைல் ஆப்பை அறிமுகம் செய்துள்ளனர்.
இந்த மொபைல் ஆப்பை ஆண்ட்ராய்டு மொபைல்களில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இந்த செயலியை பார்வையற்றவர்கள், யாருடைய உதவியும் இல்லாமல் தாமாகவே பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுத ஆட்கள் தேடுவதற்கான விவரங்களை இதில் நேரடியாகப் பதிவிடலாம். பிறகு தேர்வு எழுத தயாராக இருக்கும் தன்னார்வலர்களும் இந்த ஆப்பை பயன்படுத்தி யாரெல்லாம் தேர்வு எழுதுவதற்காக அழைக்கிறார்கள் என்பதையும் நேரடியாக தெரிந்து கொல்லலாம்.
தற்போது இந்த மொபைல் ஆப் கோவையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் இந்த மொபைல் - ஆப் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.