பார்வையற்றோருக்கு தேர்வு எழுத உதவும் தன்னார்வலர்களை இணைக்க புதிய 'மொபைல் - ஆப்' அறிமுகம்

கோவை: சீர் செய் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் பார்வையற்றோருக்கு தேர்வு எழுத உதவும் தன்னார்வலர்களை இணைக்க புதிய மொபைல் 'ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


கோவை: சீர் செய் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் பார்வையற்றோருக்கு தேர்வு எழுத உதவும் தன்னார்வலர்களை இணைக்க புதிய மொபைல் 'ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் ஒவ்வொரு தேர்வு எழுதும் பொழுதும் அவர்களுக்காக உறுதுணையாக இருப்பது அவர்களுக்காகத் தேர்வு எழுதும் தன்னார்வலர்கள். ஆனால் பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு நேரடியாக , தேர்வு எழுதும் தன்னார்வலர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை.

இதனால், அவர்களுக்குத் தேர்வு எழுதுவதற்காக ஆட்கள் கிடைக்காததால் தேர்வு எழுதுவது தடைபடுகிறது. எனவே பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளையும் , அவர்களுக்காகத் தேர்வு எழுதும் தன்னார்வலர்களையும் இணைக்கும் வகையில் சீர் செய் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் புதிய மொபைல் ஆப்பை அறிமுகம் செய்துள்ளனர்.

இந்த மொபைல் ஆப்பை ஆண்ட்ராய்டு மொபைல்களில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இந்த செயலியை பார்வையற்றவர்கள், யாருடைய உதவியும் இல்லாமல் தாமாகவே பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுத ஆட்கள் தேடுவதற்கான விவரங்களை இதில் நேரடியாகப் பதிவிடலாம். பிறகு தேர்வு எழுத தயாராக இருக்கும் தன்னார்வலர்களும் இந்த ஆப்பை பயன்படுத்தி யாரெல்லாம் தேர்வு எழுதுவதற்காக அழைக்கிறார்கள் என்பதையும் நேரடியாக தெரிந்து கொல்லலாம்.

தற்போது இந்த மொபைல் ஆப் கோவையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் இந்த மொபைல் - ஆப் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...