கோவை: கோவை திப்பனூரில் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மற்றும் பி.எஸ்.ஜி மருத்துவமனை சார்பில் இன்று ஒரு நாள் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
கோவை: கோவை திப்பனூரில் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மற்றும் பி.எஸ்.ஜி மருத்துவமனை சார்பில் இன்று ஒரு நாள் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
பன்னிமடை-யை அடுத்த திப்பனூர் என்ற கிராமத்தை ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் தத்தெடுத்துள்ளது. சுமார் 500 குடும்பங்கள் வசிக்கும் அந்த கிராமத்திற்கு வேண்டிய அடிப்படை வசதிகளை அந்த கிளப் செய்து வருகிறது. இந்த நிலையில், ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மற்றும் பி.எஸ்.ஜி மருத்துவமனை சார்பில் அந்த கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

இது குறித்து ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர்-ன் தலைவர் சான்டியாகு ஜேசு கூறுகையில், "இன்று நடைபெற்ற மருத்துவ முகாமை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ. வி.சி.ஆறுக்குட்டி தொடங்கி வைத்தார். இந்த முகாமில் 30 பேர் அடங்கிய மருத்துவ குழு திப்பனூர் கிராம மக்களுக்கு உடல் பரிசோதனைகளை செய்தனர். தோல், கண், காது, இருதயம் மற்றும் நுரையீரல் போன்ற அனைத்து விதமான பரிசோதனைகளும் பொது மக்களுக்கு செய்யப்பட்டன." என்றார்.
