கோவை: மலையாளிகளின் புத்தாண்டு தினமான விஷூ கோவையில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
கோவை: மலையாளிகளின் புத்தாண்டு தினமான விஷூ கோவையில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
தமிழகத்தில் 'தமிழ்ப் புத்தாண்டு' கொண்டாடப்படுவது போல கேரளாவில் 'விஷூ' பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை கேரளா மாநில மக்களின் புத்தாண்டாகும். இதையொட்டி, கோவையில் வசிக்கும் மலையாளிகள் விஷூ-வை வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். சித்தாப்புதூர் பகுதியில் உள்ள ஐயப்பன் கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கோவிலின் பிரதான தெய்வமான ஐயப்பன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பழங்கள் உள்ளிட்ட பொருட்களை பக்தர்கள் சுவாமிக்கு நேர்த்திக்கடனாகப் படைத்தனர். உறவினர்கள், நண்பர்களுடன் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். கோவில்களில் கை நீட்டம் வழங்கப்பட்டதைப் போல வீடுகளில் பெரியவர்கள் சிறுவர்களுக்கு காசு, பணத்தை கை நீட்டமாக கொடுத்தனர். மேலும், மலையாள பெண்கள் பாரம்பரிய முறையில் புத்தாடை அணிந்து கோவிலுக்கு வந்து இறைவனை வழிபட்டனர். உற்றார் உறவினர்களுக்கு உற்சாகமாக புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டனர்.