41-வது வருடமாக சேவையை ஆற்றும் 'கோவை எக்ஸ்பிரஸ்'

கோவை : கோவை மக்களுக்கு தொடர்ந்து சேவையை வழங்கி வரும் 'கோவை எக்ஸ்பிரஸ் ரயில்' தனது 41-வது ஆண்டு பயணத்தில் அடியெடுத்து வைத்துள்ளது.

கோவை : கோவை மக்களுக்கு தொடர்ந்து சேவையை வழங்கி வரும் 'கோவை எக்ஸ்பிரஸ் ரயில்' தனது 41-வது ஆண்டு பயணத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. 

தெற்கு ரயில்வே சார்பில் முதல்முறையாக 1977-ம் ஆண்டு ஏப்.,14-ம் தேதி முதல் நாள்தோறும் இயங்கும் அதிவிரைவு ரயில் 'கோவை எக்ஸ்பிரஸ்' அறிமுகப்படுத்தப்பட்டது. 1980 காலகட்டங்களில் பிரபலமான ரயிலாக திகழ்ந்த இந்த ரயில், சென்னை சென்ட்ரல் மற்றும் கோவை ரயில்நிலையம் வரையில் நிறுத்தங்களின்றி இயக்கப்பட்டு வந்தது. நாளடைவில், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம் மற்றும் ஈரோடு போன்ற ரயில் நிறுத்தங்கள் உருவாக்கப்பட்டன. 

இந்த நிலையில், பல்வேறு சிறப்புகளைப் பெற்ற 'கோவை எக்ஸ்பிரஸ் ரயில்' தனது 41-வது ஆண்டு பயணத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. ஆரம்ப கட்டத்தில் பல்வேறு ரயில் எண்கள் மற்றும் நேரங்களில் இயக்கப்பட்ட இந்த ரயில், தற்போது 75/76 என்ற எண்களில் இருந்து 12675/12676 எண்களாக மாற்றப்பட்டுள்ளது. மேலே கூறியுள்ள ரயில் நிறுத்தங்களைத் தவிர்த்து, பெரம்பூர், மொரப்பூர், சேலம் மற்றும் திருப்பூர் போன்ற மேலும் பல நிறுத்தங்களில் நிறுத்தப்படுகின்றன.  



 

இது தொடர்பாக ரயில் பயணி சித்தார்த் அசோக் கூறுகையில், "கடந்த ஆண்டு கொண்டாட்டத்தின் ரயில் என்ஜின் ஓட்டுநர் பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினர். ஆனால், இந்த ஆண்டு எந்தவொரு கொண்டாட்டமும் இல்லாதது, ஏமாற்றம் அளிக்கிறது," என்றார். 

நாள்தோறும் அடிப்படையில் இயக்கப்படும் கோவை எக்ஸ்பிரஸ், சென்னையில் இருந்து அதிகாலை 06.10 மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் 01.45 மணிக்க வந்தடையும். அன்று மதியமே 02.55 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் இந்த ரயில், சென்னை சென்ட்ரலுக்கு இரவு 10.35-க்கு சென்றடையும். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...