நீலகிரி : நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அன்னமலை கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்துச் சென்று நேர்த்திக் கடன் செலுத்தினர்.
நீலகிரி : நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அன்னமலை கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்துச் சென்று நேர்த்திக் கடன் செலுத்தினர்.
உதகை மஞ்சூர் அன்னமலை முருகன் கோயிலில் சித்திரை திருவிழா, தேர் திருவீதி உலாவுடன் இன்று கோலாகலமாக தொடங்கியது.

இதில், தமிழக இந்து அறநிலையத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பண்ணன், நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசன்ட் திவ்யா, எம்.பி. கே.ஆர். அர்ஜூணன் ஆகியோர் பங்கேற்று வழிபட்டனர். பின்னர், அவர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தும், காவடி ஊர்வலத்தையும் தொடங்கி வைத்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ தேர்பவனி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. மேலும், நூற்றுக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வழிபட்டனர்.
உதகை மஞ்சூர் அன்னமலை முருகன் கோயிலில் சித்திரை திருவிழா, தேர் திருவீதி உலாவுடன் இன்று கோலாகலமாக தொடங்கியது.

இதில், தமிழக இந்து அறநிலையத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பண்ணன், நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசன்ட் திவ்யா, எம்.பி. கே.ஆர். அர்ஜூணன் ஆகியோர் பங்கேற்று வழிபட்டனர். பின்னர், அவர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தும், காவடி ஊர்வலத்தையும் தொடங்கி வைத்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ தேர்பவனி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. மேலும், நூற்றுக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வழிபட்டனர்.