கோவை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள ஆயுள்தண்டனை கைதியை ஜாமினில் விட மறுக்கும் தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
கோவை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள ஆயுள்தண்டனை கைதியை ஜாமினில் விட மறுக்கும் தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு அளிக்க வந்த மனித அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் பேசியதாவது :- எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் நீண்ட காலமாக சிறையில் இருப்பவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் அறிவித்திருந்த நிலையில், இதுவரை யாரையும் தமிழக அரசு விடுவிக்கவில்லை. கோவை சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளில் இதுவரை 4 ஆயுள் தண்டனை கைதிகள் உயிரிழந்துள்ளனர். கோவை சிறையில் இரு சிறுநீரகமும் பாதிக்கப்பட்டுள்ள அபிதாகீருக்கு நிரந்தரமாக பரோல் கொடுக்க வேண்டும் அல்லது அவரை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அபுதாகீரை தமிழக அரசு வெளியே விடாமல் இருப்பது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும். ஒரு மாத பாரோலுக்கு பின்னர் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. சிறை கைதி அபுதாகீருக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு எடப்பாடி பழனிசாமி அரசுதான் பொறுப்பாகும். மேலும், சட்ட ஆலோசனைப் பெற்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவோம்.காஷ்மீர் சிறுமி படுகொலையில் சங்பரிவார் அமைப்பினர் மற்றும் பா.ஜ.க.,வினர் ஈடுபட்டுள்ளனர். அதேபோல, உத்தரபிரதேசத்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரத்திலும் பா.ஜ.க.,வினர் ஈடுபட்டுள்ளனர். இது இந்தியாவிற்கே தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரு சம்பவங்களைக் கண்டித்து மனித நேய மக்கள் கட்சி சார்பில் நாளை அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம் நடத்தப்படும், எனத் தெரிவித்தார்.
கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு அளிக்க வந்த மனித அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் பேசியதாவது :- எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் நீண்ட காலமாக சிறையில் இருப்பவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் அறிவித்திருந்த நிலையில், இதுவரை யாரையும் தமிழக அரசு விடுவிக்கவில்லை. கோவை சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளில் இதுவரை 4 ஆயுள் தண்டனை கைதிகள் உயிரிழந்துள்ளனர். கோவை சிறையில் இரு சிறுநீரகமும் பாதிக்கப்பட்டுள்ள அபிதாகீருக்கு நிரந்தரமாக பரோல் கொடுக்க வேண்டும் அல்லது அவரை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அபுதாகீரை தமிழக அரசு வெளியே விடாமல் இருப்பது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும். ஒரு மாத பாரோலுக்கு பின்னர் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. சிறை கைதி அபுதாகீருக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு எடப்பாடி பழனிசாமி அரசுதான் பொறுப்பாகும். மேலும், சட்ட ஆலோசனைப் பெற்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவோம்.காஷ்மீர் சிறுமி படுகொலையில் சங்பரிவார் அமைப்பினர் மற்றும் பா.ஜ.க.,வினர் ஈடுபட்டுள்ளனர். அதேபோல, உத்தரபிரதேசத்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரத்திலும் பா.ஜ.க.,வினர் ஈடுபட்டுள்ளனர். இது இந்தியாவிற்கே தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரு சம்பவங்களைக் கண்டித்து மனித நேய மக்கள் கட்சி சார்பில் நாளை அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம் நடத்தப்படும், எனத் தெரிவித்தார்.