சென்னை : காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை : காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "குமரி கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு திசையில் நகர்ந்து மாலத்தீவு, லட்சத்தீவு பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில், விளாத்திக்குளத்தில் 11 செ.மீட்டர் மழையும், சிவகங்கையில் 10 செ.மீட்டர் மழையும் பெய்துள்ளது. தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளது.
மேலும், வரும் 24 மணி நேரத்தில் தென்தமிழகம் மற்றும் வட தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை, குமரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். மாலத்தீவு, லட்சத்தீவு ஒட்டிய பகுதிகளில் மீனவர்கள் 15-ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம்," இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "குமரி கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு திசையில் நகர்ந்து மாலத்தீவு, லட்சத்தீவு பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில், விளாத்திக்குளத்தில் 11 செ.மீட்டர் மழையும், சிவகங்கையில் 10 செ.மீட்டர் மழையும் பெய்துள்ளது. தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளது.
மேலும், வரும் 24 மணி நேரத்தில் தென்தமிழகம் மற்றும் வட தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை, குமரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். மாலத்தீவு, லட்சத்தீவு ஒட்டிய பகுதிகளில் மீனவர்கள் 15-ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம்," இவ்வாறு அவர் கூறினார்.