ஐ.நா. தென்னிந்திய மாதிரி கூட்டமைப்பு மாநாடு இன்று தொடக்கம்

கோவை : 'தி இந்தியன் பப்ளிக் பள்ளி'யில் ஐக்கிய நாடுகள் தென்னிந்திய மாதிரி கூட்டமைப்பை கோவை மாநகர காவல்துறை ஆணையர் கே. பெரியய்யா தொடங்கி வைத்தார்.

கோவை : 'தி இந்தியன் பப்ளிக் பள்ளி'யில் ஐக்கிய நாடுகள் தென்னிந்திய மாதிரி கூட்டமைப்பை கோவை மாநகர காவல்துறை ஆணையர் கே. பெரியய்யா தொடங்கி வைத்தார். 



கோவில்பாளையத்தில் செயல்பட்டு வரும் 'தி இந்தியன் பப்ளிக் பள்ளி'யில் இன்று முதல் 3 நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 600 மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில், உலகப் பொருளாதாரப் பிரச்சனைகளை அலசி ஆராயவும், மாணவர்களுக்கு எதிராக மாணவர்களிடையே நடக்கும் ஆக்கப்பூர்வமான விவாதங்கள், எதிர்கால சமுதாயத்தின் முழுமையான வளர்ச்சிக்கு முன்னோடியாக விளங்க வழிவகை செய்வதற்கேற்ப விளக்கமளிக்கப்படுகிறது. 



இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கோவை மாநகர காவல்துறை ஆணையர் கே. பெரியய்யா பேசுகையில், "இன்றைய இளைய சமுதாயமாகத் திகழும் மாணவர்களின் முயற்சியால், இந்த மாதிரி கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதை நினைத்து நாம் பெருமை கொள்கிறோம். நாட்டின் வருங்கால முன்னோடிகளுக்குள் இப்படி ஒரு எழுச்சிமிகு கூட்டமைப்பை ஏற்பாடு செய்து, அதை இவ்வளவு அழகாக வழி நடத்திச் செல்வதைக் காணும் போது வியப்பாக உள்ளது. மாதிரி கூட்டமைப்பு மாநாட்டின் விவாதங்களின் மூலம் உலக நாடுகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஒரு முன்னோடியாக இருக்கும் என நம்புகிறேன்," என்றார். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...