கோவை : 'தி இந்தியன் பப்ளிக் பள்ளி'யில் ஐக்கிய நாடுகள் தென்னிந்திய மாதிரி கூட்டமைப்பை கோவை மாநகர காவல்துறை ஆணையர் கே. பெரியய்யா தொடங்கி வைத்தார்.
கோவை : 'தி இந்தியன் பப்ளிக் பள்ளி'யில் ஐக்கிய நாடுகள் தென்னிந்திய மாதிரி கூட்டமைப்பை கோவை மாநகர காவல்துறை ஆணையர் கே. பெரியய்யா தொடங்கி வைத்தார்.

கோவில்பாளையத்தில் செயல்பட்டு வரும் 'தி இந்தியன் பப்ளிக் பள்ளி'யில் இன்று முதல் 3 நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 600 மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில், உலகப் பொருளாதாரப் பிரச்சனைகளை அலசி ஆராயவும், மாணவர்களுக்கு எதிராக மாணவர்களிடையே நடக்கும் ஆக்கப்பூர்வமான விவாதங்கள், எதிர்கால சமுதாயத்தின் முழுமையான வளர்ச்சிக்கு முன்னோடியாக விளங்க வழிவகை செய்வதற்கேற்ப விளக்கமளிக்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கோவை மாநகர காவல்துறை ஆணையர் கே. பெரியய்யா பேசுகையில், "இன்றைய இளைய சமுதாயமாகத் திகழும் மாணவர்களின் முயற்சியால், இந்த மாதிரி கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதை நினைத்து நாம் பெருமை கொள்கிறோம். நாட்டின் வருங்கால முன்னோடிகளுக்குள் இப்படி ஒரு எழுச்சிமிகு கூட்டமைப்பை ஏற்பாடு செய்து, அதை இவ்வளவு அழகாக வழி நடத்திச் செல்வதைக் காணும் போது வியப்பாக உள்ளது. மாதிரி கூட்டமைப்பு மாநாட்டின் விவாதங்களின் மூலம் உலக நாடுகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஒரு முன்னோடியாக இருக்கும் என நம்புகிறேன்," என்றார்.

கோவில்பாளையத்தில் செயல்பட்டு வரும் 'தி இந்தியன் பப்ளிக் பள்ளி'யில் இன்று முதல் 3 நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 600 மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில், உலகப் பொருளாதாரப் பிரச்சனைகளை அலசி ஆராயவும், மாணவர்களுக்கு எதிராக மாணவர்களிடையே நடக்கும் ஆக்கப்பூர்வமான விவாதங்கள், எதிர்கால சமுதாயத்தின் முழுமையான வளர்ச்சிக்கு முன்னோடியாக விளங்க வழிவகை செய்வதற்கேற்ப விளக்கமளிக்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கோவை மாநகர காவல்துறை ஆணையர் கே. பெரியய்யா பேசுகையில், "இன்றைய இளைய சமுதாயமாகத் திகழும் மாணவர்களின் முயற்சியால், இந்த மாதிரி கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதை நினைத்து நாம் பெருமை கொள்கிறோம். நாட்டின் வருங்கால முன்னோடிகளுக்குள் இப்படி ஒரு எழுச்சிமிகு கூட்டமைப்பை ஏற்பாடு செய்து, அதை இவ்வளவு அழகாக வழி நடத்திச் செல்வதைக் காணும் போது வியப்பாக உள்ளது. மாதிரி கூட்டமைப்பு மாநாட்டின் விவாதங்களின் மூலம் உலக நாடுகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஒரு முன்னோடியாக இருக்கும் என நம்புகிறேன்," என்றார்.