சென்னையில் கைதானவர்களை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100 பேர் கைது

கோவை : சென்னையில் போராட்டம் நடத்திய போது கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வலியுறுத்தி கோவை ஆத்துப்பாலம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.


கோவை : சென்னையில் போராட்டம் நடத்திய போது கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வலியுறுத்தி கோவை ஆத்துப்பாலம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.



பிரதமர் மோடி தமிழகம் வருவதை எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய சீமான், தமீமுன் அன்சாரி உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து மண்டபத்தில் வைத்திருந்தனர். மண்டபத்தில் உள்ளவர்களை விடுவிக்கக்கோரிப் போராடிய அரூண் ரஷீத், நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்ட 18 பேரை போலீசார் கைது செய்து மேடவாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். அவர்களை 25-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

இந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக் கோரி உக்கடம் ஆத்துப்பாலம் பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சி, நாம் தமிழர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது, மாநில அரசுக்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பினர். மேலும், பிரதமர் மோடியின் வருகைக்கு எதிராகப் போராடி, கைதானவர்களை உடனடியாக விடுவிக்காவிட்டால் அனைத்து அமைப்புகளையும் ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தப் போவதாக அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து, அனுமதியின்றி போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...