புனேவிலும் சென்னை அணிக்கான போட்டிகளை நடத்துவதில் சிக்கல்..?

சென்னையிலிருந்து மாற்றப்பட்ட ஐ.பி.எல்., போட்டியை தண்ணீர் பற்றாக்குறை காரணமாக புனேவில் நடத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா : சென்னையிலிருந்து மாற்றப்பட்ட ஐ.பி.எல்., போட்டியை தண்ணீர் பற்றாக்குறை காரணமாக புனேவில் நடத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரையில் ஐ.பி.எல். போட்டிகளை அனுமதிக்கமாட்டோம் என தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. மைதானத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு விளையாட்டு போட்டி நடைபெற்றது. போட்டியின் போது, காலணி வீச்சு உள்ளிட்ட அசம்பாவிதங்களும் அரங்கேறியது. இதனால், மைதானத்தில் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, சென்னையில் மேற்கொண்டு 6 போட்டிகளை நடத்தவிட மாட்டோம் என போராட்டக்காரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சென்னை போலீசாரும் ஐ.பி.எல்., போட்டிகளுக்குப் பாதுகாப்பு வழங்க முடியாது என தெரிவித்தனர். இதனால், சென்னையில் நடைபெற உள்ள போட்டிகளை வேறு இடங்களுக்கு மாற்றம் முடிவு செய்யப்பட்டது. 

இந்த நிலையில், ஐ.பி.எல்., போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடக்கவிருந்த 6 போட்டிகளுக்கான டிக்கெட் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். ஏப்., 14-ம் தேதியிலிருந்து 20-ம் தேதிக்குள் பெற்றுக் கொள்ளலாம் என ஐ.பி.எல்., நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால், தற்போது புனேவிலும் சென்னை ஐ.பி.எல்., போட்டிகள் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. தண்ணீர் பற்றாக்குறை உள்ள புனேவில் கிரிக்கெட் மைதானத்துக்கு தண்ணீர் எப்படி வழங்க முடியும் என மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்திற்கு மும்பை நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...