65-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த தமிழ் படம் 'டூ லெட்' தேர்வு

65-வது தேசிய திரைப்பட விருதுகளில், சிறந்த தமிழ் படமாக டூ லெட் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

65-வது தேசிய திரைப்பட விருதுகளில், சிறந்த தமிழ் படமாக டூ லெட் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

65-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இயக்குநர் பிரியதர்ஷன் தலைமையிலான குழு தேர்வு செய்த விருதுகளின் பட்டியலை தேர்வுக்குழு தலைவர் சேகர் கபூர் டெல்லியில் அறிவித்துள்ளார். இதில், சிறந்த தமிழ் படமாக டூலெட் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. செழியன் இயக்கியிருக்கும் இந்தப் படம் சென்னையில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாகியுள்ளது. சிறப்பு பிரிவில் பார்வதி மேனன், நடிகர் பங்கஜ் திரிபாதிக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாள நடிகை பார்வதி மேனன், மலையாளத்தில் சிலபஸ் என்ற படத்தின் மூலம் 2006 ஆண்டு அறிமுகமானார். தொடர்ந்து, நோட் புக், பெங்களூர்ஸ் டே, என்னு நிண்டே மொய்தீன், சார்லி, டேக் ஆப் உள்பட பல மலையாள படங்களில் நடித்து உள்ளார். தமிழில் பூ மற்றும் உத்தம வில்லன், மரியான் படங்களில் நடித்து உள்ளார்.

சிறந்த படமாக பகத் பாசில் நடித்த தொண்டிமுதலும் திரிக்‌சாட்சியும், சிறந்த இந்திப்படமாக நியூட்டனும், சிறந்த தமிழ் படமாக டூ லெட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஸ்பெஷல் எபெக்ட்ஸ் - பாகுபலி-2, சிறந்த கன்னட படம் - ஹெப்பட் ரமாகா, சிறந்த இசையமைப்பாளர் - ஏ.ஆர்.ரகுமான் (காற்று வெளியிடை, மாம் (பின்னணி இசை) ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...