கோவை: எம்.பில்., பிஎச்.டி., மேற்படிப்புகளுக்கான தகுதித் தேர்வு விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுவதாக பாரதியார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கோவை: எம்.பில்., பிஎச்.டி., மேற்படிப்புகளுக்கான தகுதித் தேர்வு விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுவதாக பாரதியார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து பாரதியார் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது:-
எம்.பில்., பிஎச்.டி., மற்றும் பி.எட், போன்ற மேற்படிப்புகளுக்கு உண்டான தகுதித் தேர்வு வரும் ஜுன் மாதம் 24-ம் தேதி நடைபெற உள்ளது. கோவை, ஈரோடு, திருப்பூர், மற்றும் நீலகிரி போன்ற மாவட்டங்களில் பாரதியார் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வரும் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
கடந்த 10-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது. www.b-u.ac.in என்ற இணையதள பக்கம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மே 7-ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து பாரதியார் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது:-
எம்.பில்., பிஎச்.டி., மற்றும் பி.எட், போன்ற மேற்படிப்புகளுக்கு உண்டான தகுதித் தேர்வு வரும் ஜுன் மாதம் 24-ம் தேதி நடைபெற உள்ளது. கோவை, ஈரோடு, திருப்பூர், மற்றும் நீலகிரி போன்ற மாவட்டங்களில் பாரதியார் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வரும் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
கடந்த 10-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது. www.b-u.ac.in என்ற இணையதள பக்கம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மே 7-ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.