'சுத்தமான கழிப்பறை இல்லாததால், தண்ணீர் குடிக்காமல் கல்வி பயிலும் அவலம்' - அரசு கல்லூரி மாணவிகள் வேதனை

கோவை : கோவை அரசு கலை கல்லூரியில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான மாணவிகள் பயின்று வரும் நிலையில், பெண்களுக்கென சுத்தமான கழிப்பறை வசதி இல்லாததால் மாணவிகள் தினம்தோறும் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.


கோவை : கோவை அரசு கலை கல்லூரியில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான மாணவிகள் பயின்று வரும் நிலையில், பெண்களுக்கென சுத்தமான கழிப்பறை வசதி இல்லாததால் மாணவிகள் தினம்தோறும் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.

அரசு மருத்துவமனையை ஒட்டி அமைந்துள்ள கோவை அரசு கலை கல்லூரி வளாகத்தில் மாணவிகளுக்கென இரண்டு கழிப்பறைகள் மட்டுமே உள்ளன. அவற்றில் ஒரு கழிப்பறையை கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர் சங்கத்தினர் முறையாகப் பராமரித்து வருகின்றனர். 

ஆனால், மற்றொரு கழிப்பறையிலோ தண்ணீர் கூட வருவதில்லை, மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தப்படும் நேப்கின்களை அப்புறப்படுத்த எந்தவொரு வசதியும் இல்லை என மாணவிகள் வேதனையுடன் கூறுகின்றனர்.



'பெண்களுக்கான இரண்டு கழிப்பறைகளில் ஒன்றை மட்டுமே பெரும்பாலான மாணவிகள் பயன்படுத்தி வருகின்றனர். சில நேரங்களில் சுத்தமில்லாத கழிப்பறையையும் பயன்படுத்த வேண்டிய நிலைமை ஏற்படும். ஆனால் அதில் தண்ணீர் வருவதில்லை, குவளைகள் கிடையாது, நேப்கின்கள் ஆங்காங்கே குவிக்கப்பட்டிருக்கும். இப்படிப்பட்ட அருவருப்பான சுகாதாரமில்லாத கழிப்பறையை பயன்படுத்துவதைத் தவிர்க்க பெரும்பாலான மாணவிகள் தண்ணீர் குடிப்பதையே தவிர்த்துவிடுவதாக கூறுகிறார் மாணவி அகிலா சண்முகம்.

கோவையைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்தும், மலைப்பகுதிகளிலிருந்தும் ஏராளமான மாணவ, மாணவிகள் அரசு கலை கல்லூரியில் பயின்று வருகின்றனர். சுமார் இரண்டு மணி நேரம் பயணம் செய்து கல்லூரிக்கு வந்து சேரும் மாணவிகள், மாதவிடாய் காலங்களில் பெரும் அவதிகளைச் சந்தித்து வருவதாக வேதனையோடு கூறுகின்றனர்.

இதே கல்லூரியில் ஏராளமான ஆசிரியைகளும் கல்விப் பணி செய்து வருகின்றனர். ஆனால், அவர்களுக்கென அந்தந்த துறைகளுக்கு அருகிலே கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. அதை 'ஆசிரியைகளுக்கு மட்டும்' என்று கல்லூரி நிர்வாகம் பூட்டிவைத்து சுத்தமாகப் பராமரித்து வருவதாகவும் மாணவிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

பல தடைகளை தாண்டி கல்வி பயில வரும் மாணவிகள், கழிப்பறையைக் காரணம் காட்டி வீட்டுக்குள் முடங்கும் நிலை தற்போது அதிகரித்து வருகிறது. இதனைத்தடுக்க கல்வி நிறுவனங்கள், மாணவிகளுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க முன்வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...