கோவை : கோவை சிறுவாணி சாலையில் போக்குவரத்து நெரிசல் இல்லாத நிலையில், அங்கு மேற்கொள்ளப்படும் சாலை விரிவாக்கப் பணிகளுக்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கோவை : கோவை சிறுவாணி சாலையில் போக்குவரத்து நெரிசல் இல்லாத நிலையில், அங்கு மேற்கொள்ளப்படும் சாலை விரிவாக்கப் பணிகளுக்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் சிறுவாணி சாலை விரிவாக்கப் பணிகளுக்காக அந்த வழியாக உள்ள 83 மரங்களை வெட்ட வருவாய்துறையினர் முடிவு செய்திருந்தனர். முன்னதாக, காளம்பாளையம் முதல் இருட்டுப்பள்ளம் வரையில் சாலை விரிவாக்கத்திற்காகப் போக்குவரத்து நெரிசல் இல்லாத இந்த சாலையில் தேசிய நெடுஞ்சாலைத் துறையினரும் 200 மரங்களை வெட்டத் திட்டமிட்டிருந்தனர். முதற்கட்டமாக 7 மீ. சாலையை 10 மீட்டராக அகலப்படுத்துகின்றனர். சாலைகளின் இருபுறமும் தலா 1.5 மீ விரிவாக்கம் செய்யப்படுகிறது.

அரசின் இந்த திட்டத்திற்கு இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஓசை அமைப்பைச் சேர்ந்த கே. சையத் கூறுகையில்," இந்த சாலை மேற்கு தொடர்ச்சி மலையின் அடிப்பகுதியுடன் நிறைவடைகிறது. இதில், போக்குவரத்தும் அதிகம் காணப்படுவதில்லை. ஏன் இந்த சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது என்பது தெரியவில்லை. விரிவாக்கப் பணிகளால் விலை மதிப்பற்ற மரங்கள் அழிக்கப்படுகின்றன. 83 மரங்கள் வெட்ட திட்டமிட்டதில், 40 மரங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன," இவ்வாறு அவர் கூறினார்.