தனி மனைகளை வரைமுறைப்படுத்திக் கொள்ள 2 நாள் முகாம்

கோவை : அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் அமையும் தனி மனைகளை வரன்முறைப்படுத்திக் கொள்வதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் வரும் 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவை : அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் அமையும் தனி மனைகளை வரன்முறைப்படுத்திக் கொள்வதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் வரும் 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேட்டுப்பாளையம் நகராட்சி, காரமடை பேரூராட்சி மற்றும் காரமடை ஊராட்சி ஒன்றியம் பகுதிகளில் அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் வாங்கியுள்ள தனி மனைகளை வரன்முறைப்படுத்திக் கொள்ள ஏற்கனவே விண்ணப்பம் சமர்ப்பித்துள்ள மனுதாரர்களும், இதுவரை விண்ணப்பிக்காத தனித்த மனை உரிமையாளர்களுக்கும் காரமடை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வரும் 16 மற்றும் 17 ஆகிய இரு நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில், பங்கேற்க நினைப்பவர்கள் உரிய ஆவணங்களை எடுத்து வர வேண்டும்

மேலும், முகாம் நடக்கும் இடத்திலேயே மனுதாரர்கள் செலுத்த வேண்டிய கட்டணங்களை நேரடியாக செலுத்தவும் வசதி செய்யப்படும். நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் மனை ஒன்றுக்கு ரூ. 500 பரிசீலனைக் கட்டணமாக (செலுத்தாது இருப்பின்) செலுத்த வேண்டும். நகராட்சி பகுதிகளில் மனைப்பரப்பில் ரூ. 60 ச.மீ. மற்றும் பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் மனைப்பரப்பில் ரூ.30 ச.மீ.-யை வரன்முறைக் கட்டணமாக செலுத்த வேண்டும், நகராட்சி பகுதிகளில் மனைப் பரப்பில் ரூ. 250 ச.மீ., பேரூராட்சி பகுதிகளில் மனைப் பரப்பில் ரூ. 75 ச.மீ. மற்றும் ஊராட்சி பகுதிகளில் மனைப் பரப்பில் ரூ. 25 ச.மீ.-யை அபிவிருத்திக் கட்டணமாக செலுத்த வேண்டும். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், மேட்டுப்பாளையம் நகராட்சிப் பகுதியில் ஓடந்துறை மற்றும் சிக்கதாசம்பாளையம் வருவாய்க் கிராமப் பகுதியும், காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் சிக்கதாசம்பாளையம், நெல்லித்துறை, ஓடந்துறை, தேக்கம்பட்டி, தோலம்பாளையம் மற்றும் வெள்ளியங்காடு வருவாய் கிராம பகுதிகள் மலையிடக் கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இப்பகுதிகளுக்கு இந்த முகாம் பொருந்தாது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...