கோவையில் வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்

கோவை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோவையில் வழக்கறிஞர்கள் மனித சங்கிலி மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோவையில் வழக்கறிஞர்கள் மனித சங்கிலி மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 



சமூக நீதி வழக்கறிஞர்கள் மய்யம் சார்பில் கோவை நீதிமன்றம் வளாக முன்புள்ள சாலையிலிருந்து மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 60-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். வழக்கறிஞர்கள் கைகோர்த்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், கோ பேக் மோடி (Go back modi) , கோ பேக் மோடி என்ற முழக்கங்களை எழுப்பினர்.



மேலும், நியூட்ரினோ, மீத்தேன் ஆகிய திட்டங்களை கைவிட வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டது. மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், வழக்கறிஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சிறிது நிமிடங்களிலேயே சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர் வெண்மணி கூறியதாவது :- மத்திய பா.ஜ.க., அரசு பொறுப்பேற்றது முதல் இன்று வரை தமிழர் விரோதப் போக்கில் செயல்பட்டு வருகிறது. பிரதமர் மோடி மீது எழுந்துள்ள மக்களின் கோபம் உயர்ந்து கொண்ட செல்கிறது. தமிழர்கள் மீது ஆபத்தான திட்டங்களை கொண்டு வர துடித்து வருகிறது. ஆனால், தேவையான நீரை தர மறுக்கிறது. தற்போது, எழுந்துள்ள கோ பேக் மோடி என்ற வார்த்தை சர்வதேச அளவில் வைரலாகி வருகிறது, என்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...