திருப்பூர் : திருப்பூரில் மேம்பாலம் கட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
திருப்பூர் : திருப்பூரில் மேம்பாலம் கட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
திருப்பூா் பிரதான சாலைகளான அவினாசி சாலை, தாராபுரம் சாலை, பல்லடம் சாலை, காங்கேயம் சாலை, ஊத்துக்குளி சாலை மற்றும் மங்கலம் சாலைகளை இணைக்கும் வகையில் 48 கி.மீ. தூரம் ரிங் ரோடு கடந்த 2006-ம ஆண்டு அமைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, ரிங் ரோட்டின் மேற்பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைப்பாக முடிவெடுக்கப்பட்டது. அணைப்பாலம் பகுதியில் கட்டப்பட இருந்த அந்த உயர்மட்ட பாலத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து, நொய்யல் ஆற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் பணி முடிந்தது. ஆனால், அந்த பாலத்துடன் இணைந்து அமைய வேண்டிய ரயில்வே பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்படாமல் இருந்தது.
நீண்ட இழுபறிக்குப் பின் ரூ. 6.50 கோடி செலவில் கட்டி முடித்திருக்க வேண்டிய பாலம் ரூ. 19.79 கோடியாக மதிப்பீடு உயர்ந்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி பாலம் கட்டும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக கடந்த ஆண்டு வேலம்பாளையம் பகுதியில் பணி தொடங்கிய நிலையில், தற்போது வரை பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. ஒன்றரை ஆண்டில் பாலம் முடிக்க வேண்டிய அந்த பாலம், அதிகாரிகள் அலட்சியம் காரணமாக பாதியில் நிற்கிறது.

இதனால் பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள ரிங் ரோட்டை கனரக வாகனங்கள் முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும், சாலையின் இருபுறமும் உள்ள மக்கள், ரயில்வே வழித்தடத்தை கடக்க 10 கி.மீ தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கால தாமதத்திற்கு, மணல் தட்டுப்பாடு, நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் என்று அதிகாரிகள் காரணம் கூறி, தட்டிக்கழித்து வருகின்றனர்.இதனால் அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
இது குறித்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறுகையில், "நொய்யல் ஒட்டியுள்ள பகுதியில் 122 மீட்டர் பணி மீதமுள்ளது. இதில் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் மற்றும் நிலம் எடுப்பு பணிகள் தாமதமாவதால், பணியை வேகமாக தொடர முடியவில்லை. விரைவில், உத்தரவு பெற்று பணிகள் தொடங்கப்படும்." என்றனர்.
திருப்பூா் பிரதான சாலைகளான அவினாசி சாலை, தாராபுரம் சாலை, பல்லடம் சாலை, காங்கேயம் சாலை, ஊத்துக்குளி சாலை மற்றும் மங்கலம் சாலைகளை இணைக்கும் வகையில் 48 கி.மீ. தூரம் ரிங் ரோடு கடந்த 2006-ம ஆண்டு அமைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, ரிங் ரோட்டின் மேற்பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைப்பாக முடிவெடுக்கப்பட்டது. அணைப்பாலம் பகுதியில் கட்டப்பட இருந்த அந்த உயர்மட்ட பாலத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து, நொய்யல் ஆற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் பணி முடிந்தது. ஆனால், அந்த பாலத்துடன் இணைந்து அமைய வேண்டிய ரயில்வே பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்படாமல் இருந்தது.
நீண்ட இழுபறிக்குப் பின் ரூ. 6.50 கோடி செலவில் கட்டி முடித்திருக்க வேண்டிய பாலம் ரூ. 19.79 கோடியாக மதிப்பீடு உயர்ந்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி பாலம் கட்டும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக கடந்த ஆண்டு வேலம்பாளையம் பகுதியில் பணி தொடங்கிய நிலையில், தற்போது வரை பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. ஒன்றரை ஆண்டில் பாலம் முடிக்க வேண்டிய அந்த பாலம், அதிகாரிகள் அலட்சியம் காரணமாக பாதியில் நிற்கிறது.

இதனால் பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள ரிங் ரோட்டை கனரக வாகனங்கள் முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும், சாலையின் இருபுறமும் உள்ள மக்கள், ரயில்வே வழித்தடத்தை கடக்க 10 கி.மீ தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கால தாமதத்திற்கு, மணல் தட்டுப்பாடு, நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் என்று அதிகாரிகள் காரணம் கூறி, தட்டிக்கழித்து வருகின்றனர்.இதனால் அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
இது குறித்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறுகையில், "நொய்யல் ஒட்டியுள்ள பகுதியில் 122 மீட்டர் பணி மீதமுள்ளது. இதில் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் மற்றும் நிலம் எடுப்பு பணிகள் தாமதமாவதால், பணியை வேகமாக தொடர முடியவில்லை. விரைவில், உத்தரவு பெற்று பணிகள் தொடங்கப்படும்." என்றனர்.