இழுபறியில் பாலம் கட்டும் பணிகள் : அதிருப்தியில் மக்கள்

திருப்பூர் : திருப்பூரில் மேம்பாலம் கட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

திருப்பூர் : திருப்பூரில் மேம்பாலம் கட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். 

திருப்பூா் பிரதான சாலைகளான அவினாசி சாலை, தாராபுரம் சாலை, பல்லடம் சாலை, காங்கேயம் சாலை, ஊத்துக்குளி சாலை மற்றும் மங்கலம் சாலைகளை இணைக்கும் வகையில் 48 கி.மீ. தூரம் ரிங் ரோடு கடந்த 2006-ம ஆண்டு அமைக்கப்பட்டது. 



அதனைத் தொடர்ந்து, ரிங் ரோட்டின் மேற்பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைப்பாக முடிவெடுக்கப்பட்டது. அணைப்பாலம் பகுதியில் கட்டப்பட இருந்த அந்த உயர்மட்ட பாலத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து, நொய்யல் ஆற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் பணி முடிந்தது. ஆனால், அந்த பாலத்துடன் இணைந்து அமைய வேண்டிய ரயில்வே பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்படாமல் இருந்தது. 

நீண்ட இழுபறிக்குப் பின் ரூ. 6.50 கோடி செலவில் கட்டி முடித்திருக்க வேண்டிய பாலம் ரூ. 19.79 கோடியாக மதிப்பீடு உயர்ந்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி பாலம் கட்டும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக கடந்த ஆண்டு வேலம்பாளையம் பகுதியில் பணி தொடங்கிய நிலையில், தற்போது வரை பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. ஒன்றரை ஆண்டில் பாலம் முடிக்க வேண்டிய அந்த பாலம், அதிகாரிகள் அலட்சியம் காரணமாக பாதியில் நிற்கிறது.



இதனால் பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள ரிங் ரோட்டை கனரக வாகனங்கள் முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும், சாலையின் இருபுறமும் உள்ள மக்கள், ரயில்வே வழித்தடத்தை கடக்க 10 கி.மீ தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கால தாமதத்திற்கு, மணல் தட்டுப்பாடு, நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் என்று அதிகாரிகள் காரணம் கூறி, தட்டிக்கழித்து வருகின்றனர்.இதனால் அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். 

இது குறித்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறுகையில், "நொய்யல் ஒட்டியுள்ள பகுதியில் 122 மீட்டர் பணி மீதமுள்ளது. இதில் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் மற்றும் நிலம் எடுப்பு பணிகள் தாமதமாவதால், பணியை வேகமாக தொடர முடியவில்லை. விரைவில், உத்தரவு பெற்று பணிகள் தொடங்கப்படும்." என்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...