தனியார் நிறுவன மேலாளர் கொலை வழக்கு : இருவருக்கு ஆயுள்தண்டனை

கோவை : கோவையில் தனியார் நிறுவன மேலாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை : கோவையில் தனியார் நிறுவன மேலாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கோவை பீளமேடு பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. தனியார் நிறுவன மேலாளரான இவர் கடந்த 2012-ம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த போது மர்மமான முறையில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். இக்கொலை சம்பவம் தொடர்பாக வெள்ளைச்சாமி என்பவர் முதலில் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். பின்னர், வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் இருந்த அவர் தலைமறைவானார். தொடர்ந்து சத்தியமூர்த்தியின் ஓட்டுநரான விக்னேஷ் மற்றும் அவரது நண்பர் ஜெயராஜ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். 

இந்த வழக்கின் விசாரணை நான்காவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், குற்றவாளிகள் விக்னேஷ் மற்றும் ஜெயராஜ் ஆகியோருக்கு ஆயுள் தண்டணை மற்றும் ரூ. 10, 000 அபராதம் விதித்து நீதிபதி விஜயா உத்தரவிட்டார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...