கோவை : கோவையில் தனியார் நிறுவன மேலாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை : கோவையில் தனியார் நிறுவன மேலாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை பீளமேடு பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. தனியார் நிறுவன மேலாளரான இவர் கடந்த 2012-ம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த போது மர்மமான முறையில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். இக்கொலை சம்பவம் தொடர்பாக வெள்ளைச்சாமி என்பவர் முதலில் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். பின்னர், வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் இருந்த அவர் தலைமறைவானார். தொடர்ந்து சத்தியமூர்த்தியின் ஓட்டுநரான விக்னேஷ் மற்றும் அவரது நண்பர் ஜெயராஜ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கின் விசாரணை நான்காவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், குற்றவாளிகள் விக்னேஷ் மற்றும் ஜெயராஜ் ஆகியோருக்கு ஆயுள் தண்டணை மற்றும் ரூ. 10, 000 அபராதம் விதித்து நீதிபதி விஜயா உத்தரவிட்டார்.
கோவை பீளமேடு பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. தனியார் நிறுவன மேலாளரான இவர் கடந்த 2012-ம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த போது மர்மமான முறையில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். இக்கொலை சம்பவம் தொடர்பாக வெள்ளைச்சாமி என்பவர் முதலில் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். பின்னர், வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் இருந்த அவர் தலைமறைவானார். தொடர்ந்து சத்தியமூர்த்தியின் ஓட்டுநரான விக்னேஷ் மற்றும் அவரது நண்பர் ஜெயராஜ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கின் விசாரணை நான்காவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், குற்றவாளிகள் விக்னேஷ் மற்றும் ஜெயராஜ் ஆகியோருக்கு ஆயுள் தண்டணை மற்றும் ரூ. 10, 000 அபராதம் விதித்து நீதிபதி விஜயா உத்தரவிட்டார்.