ஜுன் 4-ம் தேதி முதல் மருத்துவ காப்பீட்டிற்கு சிகிச்சை கிடையாது

கோவை : வரும் ஜுன் 4-ம் தேதி முதல் காப்பீட்டின் மூலம் சிகிச்சை அளிக்க போவதில்லை என இந்திய மருத்துவ கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

கோவை : வரும் ஜுன் 4-ம் தேதி முதல் காப்பீட்டின் மூலம் சிகிச்சை அளிக்க போவதில்லை என இந்திய மருத்துவ கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. 

காப்பீடு என்பது எதிர்கால தேவைகளுக்காக முன்கூட்டியே ரொக்கத்தை சேமித்து வைக்கும் ஓர் திட்டமாகும். இந்தக் காப்பீடுகளை தனியார் நிறுவனங்கள் செய்து வருகின்றன. மருத்துவக் காப்பீடு, ஆயுள் காப்பீடு மற்றும் வாகன காப்பீடு என பல்வேறு காப்பீட்டு வகைகள் உள்ளன. பெரும்பாலும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, அவர்களின் ஊதியத்தில் இருந்து மருத்துவக் காப்பீட்டுக்கு பிடித்தம் செய்யப்படுகிறது. இதன்மூலம், ஊழியர்கள் தங்களது மருத்துவ தேவைகளை காப்பீடு மூலம் பூர்த்தி செய்து வருகின்றனர். 

 

இந்த நிலையில், மருந்துகள் மற்றும் சிகிச்சைகளுக்கான செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், பழைய காப்பீட்டு தொகையை அடிப்படையாகக் கொண்டு சிகிச்சைக்கான தொகையை காப்பீட்டு நிறுவனங்கள் செலுத்தி வருகின்றன. வரும் ஜுன் 4-ம் தேதி முதல் காப்பீட்டின் மூலம் சிகிச்சை அளிக்கப் போவதில்லை என இந்திய மருத்துவ கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான இறுதி முடிவு, காப்பீடு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் எடுக்கப்படும் எனத் தெரிகிறது. 

 

இது பற்றி இந்திய மருத்துவ கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் என். மகேந்திரன் கூறுகையில், காப்பீட்டிற்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தற்போது, வாழ்வதற்கான செலவு பெரிதும் அதிகரித்துள்ளது. மருந்துகள், சிகிச்சைகளுக்கான தொகையும் பலமடங்கு உயர்ந்துள்ளது. ஆனால், காப்பீட்டு நிறுவனங்கள் எங்களுக்கு பழைய தொகையின் அடிப்படையிலேயே சிகிச்சை மற்றும் மருந்துகளுக்கான கட்டணங்களை அளிக்கின்றனர். இது பெரிய தனியார் மருத்துவமனைகளுக்கு பொருந்தும். ஆனால், சிறிய மருத்துவமனைகளுக்கு பொருந்தாது," என்றார். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...