காருண்யா கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் : பேராசிரியரின் கார் அடித்து நொறுக்கியதால் பதற்றம்

கோவை : கோவை காருண்யா கல்லூரியில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.


கோவை : கோவை காருண்யா கல்லூரியில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். 



சிறுவாணி செல்லும் சாலையில் காருண்யா கல்லூரி இயங்கி வருகிறது. அக்கல்லூரியில், தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். 

இந்த நிலையில், அக்கல்லூரியில் மிக அதிக கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக மாணவர்கள் அக்கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காததால், ஆத்திரமடைந்த மாணவர்கள் இன்று வகுப்புகளைப் புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்தப் போராட்டத்தில் 150 மாணவிகள் உட்பட பெண்கள் 700 பேர் கலந்து கொண்டு கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். அப்போது, "சஸ்பெண்ட் செய்த மாணவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும், யூனியன் வேண்டும், கட்டணத்தை உயர்த்தாதே" போன்ற பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

தொடர்ந்து, பல்கலைக்கழக துணைவேந்தர் எலிஜா பிளாசம் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். 



இதனிடையே, பேராசிரியர் ஒருவர் கல்லூரியின் வாயிற் கதவு திறந்த போது, காரை வேகமாக இயக்கினார். அப்போது, போராட்டம் நடத்தி வந்தவர்கள்  மீது கார் மோதியதில் 4 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இதனால், ஆத்திரமடைந்த மாணவர்கள், பேராசிரியரின் காரை மடக்கி அடித்து நொறுக்கினர். இதனால், கல்லூரி வளாகத்தில் பெரும் பதற்றம் நிலவியது. 



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...