முன்பதிவற்ற பயணச்சீட்டுகள் வாங்க செயலி அறிமுகம்

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் செல்போன் செயலி மூலம் முன்பதிவற்ற பயணச்சீட்டுகள் வாங்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் செல்போன் செயலி மூலம் முன்பதிவற்ற பயணச்சீட்டுகள் வாங்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

மத்திய ரயில்வே அமைச்சர் அறிவித்திருந்த ‘5 நிமிடங்களில் ரயில்வே டிக்கெட்டுகள்’ திட்டத்தின் படி, ரயில்வே பயணிகள் முன்பதிவற்ற பயணச்சீட்டுகள், சீசன் டிக்கெட்டுகள் மற்றும் நடைமேடைச் சீட்டுக்களை “UTS” (அல்லது UTSONMBILE) என்னும் செயலியின் மூலம் வாங்கும் திட்டம் வரும் ஏப்ரல் 14-ம் தேதி முதல் தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது. 

ஜி.பி.எஸ். அடிப்படையிலான இந்த செயலியை ரயில்பயனாளர்கள் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கான பணப்பரிவர்த்தனையை ரயில்வேயின் பிரத்யேக ‘R-Wallet’ –ல் ரயில்வே பயணச்சீட்டு முன்பதிவு அலுவலகத்திலோ அல்லது www.irctc.co.in இணையதளம் மூலமாகவோ மேற்கொள்ளலாம். 

இதுவரை காகிதப் பயணச்சீட்டு இல்லாமல், சென்னை புறநகர் ரயில் சேவைகளில் மட்டும் புழக்கத்தில் இருந்த இந்த செயலி தற்போது தெற்கு ரயில்வே முழுவதும் சுமார் 20 லட்சம் முன்பதிவற்ற பயணச்சீட்டுகள் மூலம் பயணிக்கும் பயணிகளுக்கு (மொத்த ரயில் பயணிகளில் இவர்களது எண்ணிக்கை சுமார் 91 சதவீதமாகும்) உதவும் வகையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த செயலி மூலம் காகிதம் இல்லாத ரயில் டிக்கெட்டுகளை ரயில்நிலைய வளாகத்தில் இருந்து சுமார் 25 மீட்டர் முதல் 5 கி.மீ. தொலைவுக்குள் பதிவு செய்து தங்களது செல்பேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இது குறித்து உதவி பெற பயணிகள் முக்கிய ரயில்நிலையங்களில் 24 மணி நேரம் இயங்கும் உதவி மையங்களையோ அல்லது utsonmbile.indianrail.gov.in என்ற இணையதளத்திலோ விபரங்கள் தெரிந்து கொள்ளலாம்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...