மேம்பாலம் கட்டும் பணிக்காக கட்டிடம் இடிப்பு: மாற்று இடத்திற்கான பணிகளும் தீவிரம்

கோவை: உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலம் கட்டும் பணிக்காக உக்கடம் பேருந்து நிலையம் எதிரே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் மாநகராட்சி ஊழியர்களால் இடிக்கப்பட்டது.

கோவை: உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலம் கட்டும் பணிக்காக உக்கடம் பேருந்து நிலையம் எதிரே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் மாநகராட்சி ஊழியர்களால் இடிக்கப்பட்டது.



கோவை மாவட்டம் உக்கடம் - ஆத்துப்பாலம் இடையே போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புதிய மேம்பாலம் கட்டுவதற்கான திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. மேலும், அண்மையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இத்திட்டம் துரிதமாக முடிக்கப்படும் என்றார். 

இந்த நிலையில், உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலம் கட்டும் பணிக்காக உக்கடம் பேருந்து நிலையம் எதிரே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் இன்று காலை மாநகராட்சி ஊழியர்களால் இடிக்கப்பட்டது. இந்த வணிக வளாகத்தில் 28 பழக்கடைகளும், 4 கோழி இறைச்சி கடைகளும் செயல்பட்டு வந்தன. மேம்பாலப் பணிகளுக்காக வணிக வளாகம் இடிக்கப்படவிருப்பதால் கடைகளை காலி செய்யுமாறு மாநகராட்சி நிர்வாகத்தினர் ஏற்கனவே வலியுறுத்தி வந்தனர்.

மாற்று இடம் கோரிய பழக் கடை வியாபாரிகளுக்கு தற்காலிகமாக லாரிப்பேட்டை வணிக வளாகத்தில் இடம் வழங்க மாநகராட்சி உத்தேசித்துள்ளது. 4 கோழி இறைச்சி கடைகளுக்கும் பேரூர்-சுந்தராபுரம் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள மீன் விற்பனை வளாகத்தில் ஷெட் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. 

முன்னதாக, மீன் மார்க்கெட்டுக்குள் கோழிக்கடை அமைப்பதற்கு மீன் வியாபாரிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். கோழிக் கடைகள் வருவதால் சில்லறை மீன் வியாபாரிகளுக்கும், வாகன நிறுத்துவதற்கும் இடையூறாக இருக்கும் என்று மீன் வியாபாரிகள், மாநகராட்சி அதிகாரிகளோடு நேற்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மீன் வியாபாரிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் வளாகத்தின் ஜெனரேட்டர் அறைக்கு அருகே கோழிக் கடை அமைக்க மாற்று நடவடிக்கை எடுக்கப்பட்டதையடுத்து மீன் வியாபாரிகள் கலைந்து சென்றனர்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...