கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் தீக்குளிப்பு போன்ற உயிர் தியாகங்களில் ஈடுபட வேண்டாம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் தீக்குளிப்பு போன்ற உயிர் தியாகங்களில் ஈடுபட வேண்டாம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று சென்னை வந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் கருப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் நீர் முறைப்படுத்தும் குழு அமைக்க மோடி அரசு முட்டுக்கட்டை போட்டு வருகிறது.
தமிழக மக்களுக்கு துரோகம் செய்து வருகிறது. தமிழக மக்களுக்கு விரோதமாக ஆளுநரும் செயல்பட்டு வருகிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் தீக்குளிப்பு போன்ற உயிர் தியாகம் செய்யும் போராட்டத்தில் மக்கள் ஈடுபட வேண்டாம்." என்று அவர் பேசினார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று சென்னை வந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் கருப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் நீர் முறைப்படுத்தும் குழு அமைக்க மோடி அரசு முட்டுக்கட்டை போட்டு வருகிறது.
தமிழக மக்களுக்கு துரோகம் செய்து வருகிறது. தமிழக மக்களுக்கு விரோதமாக ஆளுநரும் செயல்பட்டு வருகிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் தீக்குளிப்பு போன்ற உயிர் தியாகம் செய்யும் போராட்டத்தில் மக்கள் ஈடுபட வேண்டாம்." என்று அவர் பேசினார்.