கோவை: பிரதமர் நரேந்திர மோடிக்கு புறா தூது மூலமாகவும், கருப்பு பலூன்களை பறக்கவிட்டும் நூதன போராட்டம் நடத்திய தி.மு.க-வினரை போலீசார் கைது செய்தனர்.
கோவை: பிரதமர் நரேந்திர மோடிக்கு புறா தூது மூலமாகவும், கருப்பு பலூன்களை பறக்கவிட்டும் நூதன போராட்டம் நடத்திய தி.மு.க-வினரை போலீசார் கைது செய்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், இன்று தமிழகம் வரும் பிரதமரை கண்டித்தும் தி.மு.க சார்பில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டம் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நகர தி.மு.க சார்பில், நகர செயலாளர் தென்றல் செல்வராஜ் தலைமையில் தி.மு.க-வினர் கருப்பு பலூன்களை பறக்க விட்டனர். இதையடுத்து கருப்பு பலூன்களை பறக்கவிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
உக்கடம் கோட்டை மேடு பகுதியில் மாநகர் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கோட்டை அப்பாஸ் தலைமையில், புறா தூது மூலம் பிரதமருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் 5 புறாக்களும், கருப்பு பலூன்களை பறக்க விடப்பட்டன.