பிரதமருக்கு புறா தூது, கருப்பு பலூன்: கோவையில் தி.மு.க.வினர் கைது

கோவை: பிரதமர் நரேந்திர மோடிக்கு புறா தூது மூலமாகவும், கருப்பு பலூன்களை பறக்கவிட்டும் நூதன போராட்டம் நடத்திய தி.மு.க-வினரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: பிரதமர் நரேந்திர மோடிக்கு புறா தூது மூலமாகவும், கருப்பு பலூன்களை பறக்கவிட்டும் நூதன போராட்டம் நடத்திய தி.மு.க-வினரை போலீசார் கைது செய்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், இன்று தமிழகம் வரும் பிரதமரை  கண்டித்தும் தி.மு.க சார்பில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டம் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நகர தி.மு.க சார்பில், நகர செயலாளர் தென்றல் செல்வராஜ் தலைமையில் தி.மு.க-வினர் கருப்பு பலூன்களை பறக்க விட்டனர். இதையடுத்து கருப்பு பலூன்களை பறக்கவிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

உக்கடம் கோட்டை மேடு பகுதியில் மாநகர் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கோட்டை அப்பாஸ் தலைமையில், புறா தூது மூலம் பிரதமருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் 5 புறாக்களும், கருப்பு பலூன்களை பறக்க விடப்பட்டன.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...