சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பத்திரிக்கையாளர்களை சந்தித்த நடிகர் சிம்பு, காவிரி பிரச்சினைக்காக, கர்நாடக மக்கள் ஒரு டம்ளர் தண்ணீரை தமிழனுக்கு கொடுத்து வீடியோவாக வெளியிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பத்திரிக்கையாளர்களை சந்தித்த நடிகர் சிம்பு, காவிரி பிரச்சினைக்காக, கர்நாடக மக்கள் ஒரு டம்ளர் தண்ணீரை தமிழனுக்கு கொடுத்து வீடியோவாக வெளியிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
இதற்கு கர்நாடக மக்கள் ஆதரவு தெரிவித்து புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர். மேலும், சிம்புவின் இந்த அழைப்பால் இரு மாநிலங்களுக்கிடையே உள்ள சகோதரத்துவம் மேம்படும் என்றும் ஒற்றுமை ஏற்படும் என்றும் அம்மாநில மக்கள் ட்வீட் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில், கர்நாடக மக்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்து நடிகர் சிம்பு, தன்னுடைய கோரிக்கையை ஏற்று தமிழர்களுக்கு தண்ணீர் வழங்கிய கர்நாடக மக்களுக்கு நன்றியைத் தெரிவித்து கொள்வதாகக் கூறியுள்ளார்.
இந்த நிகழ்வு மூலம் மக்கள் தண்ணீர் கொடுக்கத் தயாராக உள்ளதாகவும், மக்கள் அனைவரும் ஒற்றுமையாகத் தான் உள்ளனர் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிம்பு தெரிவித்துள்ளார்.

இதற்கு கர்நாடக மக்கள் ஆதரவு தெரிவித்து புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர். மேலும், சிம்புவின் இந்த அழைப்பால் இரு மாநிலங்களுக்கிடையே உள்ள சகோதரத்துவம் மேம்படும் என்றும் ஒற்றுமை ஏற்படும் என்றும் அம்மாநில மக்கள் ட்வீட் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில், கர்நாடக மக்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்து நடிகர் சிம்பு, தன்னுடைய கோரிக்கையை ஏற்று தமிழர்களுக்கு தண்ணீர் வழங்கிய கர்நாடக மக்களுக்கு நன்றியைத் தெரிவித்து கொள்வதாகக் கூறியுள்ளார்.
இந்த நிகழ்வு மூலம் மக்கள் தண்ணீர் கொடுக்கத் தயாராக உள்ளதாகவும், மக்கள் அனைவரும் ஒற்றுமையாகத் தான் உள்ளனர் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிம்பு தெரிவித்துள்ளார்.
