ஈரோடு: பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோட்டியில் வாலிபர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு: பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோட்டியில் வாலிபர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியைச் சேர்ந்தவர் தர்மலிங்கம், வியாபாரி. இவர் இன்று அதிகாலை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசினை கண்டித்தும், பிரதமர் மோடி தமிழகம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தனது வீட்டு சுவற்றில் கண்டன வாக்கியங்கள் எழுதினார். தொடர்ந்து, தனது உடல் மீது பெட்ரோல் ஊற்றித் தீக்குளித்தார்.

தர்மலிங்கத்தின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பிரதமர் மோடி தமிழக வருகைக்கு பல்வேறு தரப்பு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.