சென்னை : தொடர் போராட்டங்கள் காரணமாக சென்னையில் நடைபெற இருந்த ஐ.பி.எல் போட்டிகள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
சென்னை : தொடர் போராட்டங்கள் காரணமாக சென்னையில் நடைபெற இருந்த ஐ.பி.எல் போட்டிகள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
சென்னையில் ஐ.பி.எல் போட்டியை நடத்தக்கூடாது என்று தமிழ் அமைப்புகள் மற்றும் பல்வேறு கட்சிகள் எச்சரிக்கை விடுத்திருந்தன. அதன்படி, சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியின் போது பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, டெல்லியில் பி.சி.சி.ஐ மற்றும் ஐ.பி.எல் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியுடன், இதர அணிகள் மோதும் 6 போட்டிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், வரும் 20-ம் தேதி சென்னியில் நடைபெற இருந்த கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் ஐ.பி.எல் போட்டியை நடத்தக்கூடாது என்று தமிழ் அமைப்புகள் மற்றும் பல்வேறு கட்சிகள் எச்சரிக்கை விடுத்திருந்தன. அதன்படி, சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியின் போது பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, டெல்லியில் பி.சி.சி.ஐ மற்றும் ஐ.பி.எல் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியுடன், இதர அணிகள் மோதும் 6 போட்டிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், வரும் 20-ம் தேதி சென்னியில் நடைபெற இருந்த கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.