திண்டிவனம்: காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி திண்டிவனத்தில் ரயில் மீது ஏறி போராட்டம் நடத்திய பா.ம.க தொண்டர் உடல் கருகி படுகாயமடைந்துள்ளார்.
திண்டிவனம்: காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி திண்டிவனத்தில் ரயில் மீது ஏறி போராட்டம் நடத்திய பா.ம.க தொண்டர் உடல் கருகி படுகாயமடைந்துள்ளார்.
பல்வேறு காரணங்களை கூறி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசைக் கண்டித்தும், மத்திய அரசுக்கு அழுத்தம் தரத் தவறும் மாநில அரசைக் கண்டித்தும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், திண்டிவனத்தில் அக்கட்சியினர் ரயில் மறியலில் ஈடுபட்ட போது, தொண்டர் ஒருவர் ரயில் மீது ஏறி ஓடினார். அப்போது ரயிலுக்கு மேல் இருந்த மின் கம்பியில் உரசியதில் அவர் உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி எறியப்பட்டார். உடல் கருகிய நிலையில் தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு காரணங்களை கூறி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசைக் கண்டித்தும், மத்திய அரசுக்கு அழுத்தம் தரத் தவறும் மாநில அரசைக் கண்டித்தும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், திண்டிவனத்தில் அக்கட்சியினர் ரயில் மறியலில் ஈடுபட்ட போது, தொண்டர் ஒருவர் ரயில் மீது ஏறி ஓடினார். அப்போது ரயிலுக்கு மேல் இருந்த மின் கம்பியில் உரசியதில் அவர் உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி எறியப்பட்டார். உடல் கருகிய நிலையில் தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.