சிற்றுளி அறக்கட்டளை சார்பில் கோவை வீல் சேர் கூடைப்பந்து அணி தொடங்கப்பட்டது. இந்த அணிக்கான நிதி திரட்டுவதற்கு மினி மாரத்தான் போட்டி வரும் மே மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது.
கோவை: சிற்றுளி அறக்கட்டளை சார்பில் கோவை வீல் சேர் கூடைப்பந்து அணி தொடங்கப்பட்டது. இந்த அணிக்கான நிதி திரட்டுவதற்கு மினி மாரத்தான் போட்டி வரும் மே மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது.

கே.ஜி. கல்லூரி மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்த மாரத்தான் போட்டிக்காக முன்பதிவு வரும் 20-ம் தேதி வரை நடை பெறுகிறது.

இது குறித்து சிற்றுளி அமைப்பின் நிறுவனர் குணசேகரன் கூறுகையில், "மாற்றுத் திறனாளிகளுக்கான நிதியைத் திரட்டும் நோக்கில் இந்த மாரத்தான் நடைபெற உள்ளது. அந்த அணியில் 18 பேர் உள்ளனர். அவர்கள் சாதாரண வில் சேரை பயன்படுத்தியே பயிற்சி பெற்று வருகின்றனர். ஆனால், விளையாடுவதற்கு உகந்த வீல் சேர் வாங்குவதற்கு ரூ.60 ஆயிரம் வரை செலவாகிறது. அதற்காகவே இந்த போட்டி நடத்தப்படுகிறது.

இந்த மாரத்தான் போட்டி ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு என மூன்று பிரிவாக நடத்தப்படுகிறது. இந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொள்வதற்கான முன்பதிவை www.sittruli.org என்ற இணையதள முகவரியின் வாயிலாகவும், சென்னை மொபைல்ஸ் கடைகளிலும் செய்து கொள்ளலாம்." என்றார்.