முறை தவறி நடந்து கொண்ட காவலர்களைக் கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

திருப்பூர்: நீதிமன்றத்திற்குள் முறை தவறி நடந்து கொண்ட காவலர்களைக் கண்டித்து திருப்பூர் மாவட்ட வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்: நீதிமன்றத்திற்குள் முறை தவறி நடந்து கொண்ட காவலர்களைக் கண்டித்து திருப்பூர் மாவட்ட வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவையில் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் மூன்று பேர் சரணடைந்த நிலையில் மேலும் ஒரு குற்றவாளியான சந்தோஷ் என்ற வாலிபர் சரணடைய திருப்பூர் முதலாவது நீதிமன்றத்திற்கு நேற்று வந்தார்.

அப்போது, நீதிமன்ற வளாகத்தில் கோவை சிங்காநல்லூர் காவல் ஆய்வாளர் முனிஸ்வரன் உள்ளிட்ட நான்கு காவலர்கள் அந்த வாலிபரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றிச்செல்ல முற்பட்டனர்.

இதனைக் கண்ட வழக்கறிஞர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் நீதிபதியிடம் முறையிட்டனர். இந்த நிலையில், நீதிமன்றத்தில் அத்துமீறி நடந்து கொள்ளும் காவல் துறையினரை கண்டித்து இன்று 700-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.



மேலும், அத்துமீறி நடந்து கொண்ட சிங்காநல்லூர் காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...