காவிரி விவகாரம்: கோவை, திருப்பூரில் ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட பா.ம.க-வினர் கைது

கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இன்று கோவை மத்திய ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பாட்டாளி மக்கள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இன்று கோவை மத்திய ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பாட்டாளி மக்கள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக பாட்டாளி மக்கள் கட்சியினர் கோவை மத்திய ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.



பொங்கலூர் இரா.மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.



தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களைக் கைது செய்தனர்.



இதேபோல், திருப்பூரில் பா.ம.க.வினர் ரயில் நிலைய முற்றுகைப் போராட்டம் நடத்தினர். ரயில் நிலையத்திற்குள் அவர்களை போலீசார் அனுமதிக்காததால் இரு தரப்பினருக்குமிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.



மேட்டுப்பாளையத்தில் பா.ம.க-வை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் இன்று ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். நீலகிரியில் ஏ.டி.சி. சுதந்திர திடல் முன்பு திரண்ட அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். 



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...