கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இன்று கோவை மத்திய ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பாட்டாளி மக்கள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இன்று கோவை மத்திய ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பாட்டாளி மக்கள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக பாட்டாளி மக்கள் கட்சியினர் கோவை மத்திய ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

பொங்கலூர் இரா.மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களைக் கைது செய்தனர்.

இதேபோல், திருப்பூரில் பா.ம.க.வினர் ரயில் நிலைய முற்றுகைப் போராட்டம் நடத்தினர். ரயில் நிலையத்திற்குள் அவர்களை போலீசார் அனுமதிக்காததால் இரு தரப்பினருக்குமிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

மேட்டுப்பாளையத்தில் பா.ம.க-வை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் இன்று ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். நீலகிரியில் ஏ.டி.சி. சுதந்திர திடல் முன்பு திரண்ட அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
